உபை இப்னு கஅப்(ரலி) முஸ்ஹஃப்பில் அல்ஹஃப்த் மற்றும் அல்ஃஹலா ஸுராக்கள்
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பி வரும் விமர்சனங்களின் வரிசையில் அடுத்தாக இடம் பெறும் பகுதி உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் அதிகப்படியான இரண்டு சூராக்களை குர்ஆனின் பகுதியாக கொண்டிருந்தார்கள், அது இன்றைய குர்ஆனில் இடம்பெறவில்லை என்பதாகும். அது குறித்த இஸ்லாமோஃபோபுகளின் வாதத்தையும், அதற்கு அடிப்படையாக அமைந்த ஆதாரங்களையும் அதற்கான பதிலையும் பார்ப்போம். இஸ்லாமோஃபோபுகளின் ஆதாரங்களும் விமர்சனங்களும் நமது பதில் உபை இப்னு கஅப்(ரலி)அவர்களது முஸ்ஹஃப் உஸ்மான்(ரலி) அவர்களிடம் ஹிஜ்ரி 30ல் ஒப்படைக்கப்படுதல் உபை இப்னு கஅப்(ரலி)அவர்களது முஸ்ஹஃப் என்று ஹி30க்கு பிறகு கூறப்படுபவற்றில் காணப்பட்ட முரண்பட்ட வசனங்கள் ஆய்வினால் பெறப்படும் இறுதி முடிவுகள் ஆதாரம்: عَنِ ابْن سِيرِينَ، قَالَ: كَتَبَ أُبَيُّ بْنُ كَعْبٍ فِي مُصْحَفِهِ فَاتِحَةَ الْكِتَابِ وَالْمُعَوِّذَتَيْنِ، وَاللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ، وَاللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ இப்னு ஸீரின் கூறியதாவது, "உபை இப்னு கஅப்(ரலி) அவரது முஸ்ஹஃபில் அல் ஃபாத்திஹா, அல் முஅவ்விததைன்