தொடர் கட்டுரைகள்

Wednesday 25 March 2020

இஸ்லாமிய நிக்காஹ்வின் திருமணக்கொடை (மஹர்) விமர்சனமும் விளக்கமும்

﷽‎

             
       சில காலமாக சில இந்துத்துவா கும்பலும், கிறித்தவ மிசனரிகளும் இஸ்லாமிய திருமணத்தில் வழங்கப்படும் மஹர் குறித்து விமர்சனம் செய்து வருகின்றன. அது பெண்ணின் யோனியை உபயோகிக்க விதிக்கப்படும் தொகை என கூறி அதை விமர்சித்து வருகின்றன. இஸ்லாமிய திருமண முறையில் இடம் பெறும் மஹர் குறித்து பார்ப்பதற்கு முன்பு திருமணம் என்றால் என்ன என்பதையே இவர்களுக்கு விளக்க வேண்டிய அவல நிலை இங்கு ஏற்பட்டுள்ளது என்பதையே இவர்களின் இந்த அறிவீன வாதம் உணர்த்துகிறது

திருமணம் ஏன் ?
                 ஒரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது என்ன? மனித வாழ்வில் திருமணம் என்பது சட்டபூர்வமாக பாலியல் இச்சையை தீர்த்து கொள்ளும் ஒரு வடிகால்.அதன் பலனையும் , நஷ்டத்தையும் சட்டபூர்வமாக அனுமதிக்கும் ஒரு முறைதான் திருமணம். இவ்வாறு திருமணம்( அதாவது பாலியல் தேவையை பூர்த்தி செய்வதற்கான அனுமதியை பெற) செய்ய ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு நடைமுறையை கொண்டுள்ளது. சிலர் தாலி கட்டுகிறார்கள், சிலர் மோதிரம் மாற்றுகிறார்கள், சிலர் பதிவு அலுவலகத்தில் பதிந்து நடைமுறையை பின்பற்றி திருமணம் செய்கிறார்கள்.....இஸ்லாமிய மஹர் எனும் முறைமையை கேலி செய்யும் கூமுட்டைகளின் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் பாலியல் சுகத்தை அடைய தாலி கட்டுகிறார்கள்....விருந்து வைக்கிறார்கள்,... மோதிரம் மாற்றுகிறார்கள்..... இன்னும் இவர்களது பாசையில் சொல்வதாக இருந்தால் மந்திரம் ஓதி ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்த கூட்டி கொடுக்கிறார் ஐயர்.  முதலிரவுக்கு செய்யப்படும் முறைமை என அனைத்தும்.... திருமணத்தின் ஒவ்வொரு பரிமானமும் இருவரின் பாலியல் தேவையை பூர்த்தி செய்ய அனுமதிக்கும் முறைமையே.

        இத்தகைய ஒரு நடைமுறைதான் இஸ்லாமிய திருமணத்தில் நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்படும் பரிசு அல்லது கொடை என்ற இந்த மஹர் ஆகும்.ஆனால் இஸ்லாம் இதை மூடி மறைத்து சொல்லாமல் நாம் மேலே குறிபிட்டது போல பட்டவர்த்தணமாய் சொல்கிறது அவ்வளவே...ஆக இனி மஹர் குறித்த இஸ்லாமிய பார்வை என்ன என்பதையும் பார்ப்போம்..


             அல்லாஹ் தனது வேதத்தில் இன்று வழக்கத்தில் இருக்கும் மஹர் குறித்து குறிப்பிடும் போது எந்த இடத்திலும் அதை மஹர் (கூலி) என்று குறிப்பிடவில்லை. குர்ஆன் 4:4 இல் குறிப்பிடும் போது صَدُقَا - தர்மம் என்று கூறுகிறான்

وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுட னும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!(திருக்குர்ஆன் 4:4)
                     அது போல குர்ஆன் 4:24, 5:5, 60:10 குறிப்பிடும் போது أُجُورَ - பரிசு என்று கூறுகிறான்.

وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۖ كِتَابَ اللَّهِ عَلَيْكُمْ ۚ وَأُحِلَّ لَكُم مَّا وَرَاءَ ذَٰلِكُمْ أَن تَبْتَغُوا بِأَمْوَالِكُم مُّحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ ۚ فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُم بِهِ مِن بَعْدِ الْفَرِيضَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا

24. உங்கள் அடிமைப் பெண்களைத்107 தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை108 கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.(திருக்குர்ஆன் 4:24)
 
الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ ۖ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ ۖ وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ ۗ وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

5. தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின்27 உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.137 உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட27 கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை108 வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.138 தனது நம்பிக்கையை (இறை)மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நட்டமடைந்தவராக இருப்பார்.(திருக்குர்ஆன் 5:5)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ ۖ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ ۖ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ ۖ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ ۖ وَآتُوهُم مَّا أَنفَقُوا ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ ۚ وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ وَاسْأَلُوا مَا أَنفَقْتُمْ وَلْيَسْأَلُوا مَا أَنفَقُوا ۚ ذَٰلِكُمْ حُكْمُ اللَّهِ ۖ يَحْكُمُ بَيْنَكُمْ ۚ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
10. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத்460 செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏகஇறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்.91 அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை108 நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏகஇறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.(திருக்குர்ஆன் 60:10)

                     ஆக மேற்குறிபிட்ட வசனங்களை வைத்துப்பார்க்கும் போது மஹர் அல்லது உஜ்ர என்பது திருமணத்தில் பின்பற்றப்படும் ஒரு நிபந்தனை. பளிச்சென்று சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் தனது பாலியல் இச்சையை மேற்கொள்ள பெறும் அனுமதிக்காக நிறைவேற்றும் நிபந்தனைகளில் ஒன்று....

அதனால்தான் பின்வரும் ஹதீஸ் இப்படி கூறுகிறது

புகாரி 5350. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
                      சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த அந்தத் தம்பதியரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர்’ என்று கூறிவிட்டு, (கணவரான உவைமிரைப் பார்த்து), ‘இனி அவளின் மீது உமக்கு எந்த அதிகாரமும் கிடையாது’ என்று கூறினார்கள்.
     அதற்கு அவர், ‘இறைத்தூதர் அவர்களே! (அவளுக்கு நான் மணக்கொடையாக அளித்திருந்த) என்னுடைய பொருள் (என்னாவது)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘உமக்கு (அந்த)ப் பொருள் கிடைக்காது. நீர் அவளின் மீது உண்மை(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், அவளுடைய கற்பை நீர் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். நீர் அவளின் மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், (அவளை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தினால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகுதொலைவில் உள்ளது’ என்று கூறினார்கள். 

மேலும் இந்த அனுமதியைப்பெற இன்னும் அதிகப்படியான நிபந்தனைகளை விதிக்கும் அதிகாரம் பெண்ணுக்கு உண்டு அதைத்தான் பதிவாளர் குறிப்பிடும் நஸயீ 3282 குறிப்பிடுகிறது

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ تَمِيمٍ، قَالَ سَمِعْتُ حَجَّاجًا، يَقُولُ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ أَبَا الْخَيْرِ، حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ "إِنَّ أَحَقَّ الشُّرُوطِ أَنْ يُوَفَّى بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ" ‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளே ஆகும்.இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல் : நஸயீ 3282)

           ஆக மேற்குறிபிட்ட ஹதீஸ் தெளிவாக ஒன்றை கூறுகிறது அதாவது நிக்காஹ் (பாலுறவு அனுமதி)என்பதற்கு பல நிபந்தனைகளை விதிக்கலாம்...அதில் மஹர் என்பதும் ஒன்று......அதனால்தான் الشُّرُوطِ - நிபந்தனைகள் என்ற பன்மை சொல் ஹதீஸில் பயன்படுத்தப்படுவதை பார்க்க முடிகிறது.

            மேலும் இவர்கள் கூறுவது போன்று இருந்தால் அதாவது மஹர் என்பது பாலுறவுக்கான கூலி இல்லை என்பதால்தான் பெண்கள் குலாஉ அதாவது விவாக முறிவு கோரும் போது பெற்ற மஹரை திருப்பி செலுத்த வேண்டும் என்ற கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது, இதோ பின் வரும் ஹதீஸ் அதை உறுதி செய்கிறது

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
          ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்' என்று கூறினார். அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள் அவர், 'ஆம் (தந்து விடுகிறேன்)' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), 'தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!' என்று கூறினார்கள். (புகாரி : 5273.)

       ஆக மேற்குறிபிட்ட செய்தி தெளிவாக உணர்த்துவது ஒன்றைத்தான் அதாவது மஹர் என்பது நிபந்தனைதான் அது உறவு கொள்வதற்கான கூலி அல்ல....எப்படி தங்கத்தால் ஆன குறிபிட்ட டிசைன் தாலி கட்டுவது நிபந்தனையோ அது போல...அப்படி கூலியாக இருந்தால் கூலி கழிக்கப்பட்ட மஹ்ரை அல்லவா திருப்பி செலுத்த கட்டளையிடப்பட்டிருக்கும்.

       மஹர் என்பது எப்படி ஒவ்வொரு திருமணத்திலும் (அதாவது உறவு கொள்ள அனுமதிக்கும் விழாவிலும்) நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதோ, அது போன்ற ஒன்றுதான் . அதனால்தான் இரும்பு மோதிரத்தையாவது மணக்கொடையாக வழங்க அறிவுறுத்தப்பட்ட நிகழ்வும் மணவாளர் அதுவும் இல்லை எனக்கூறி திருகுர்ஆனின் சில வசனங்களுக்காக திருமணம் செய்யப்பட்ட சம்பவங்களை காணமுடியும் ( முஸ்லீம் 2785)...

       மேலும் இஸ்லாமிய நடைமுறையில் திருமணத்திற்காக கோரப்படும் நிபந்தனைகள் அனைத்தும் பெண்ணின் பாதுக்காப்பை அடிப்படையாக கொண்டது. அதில் பெண்களுக்கான முழு சுதந்திரத்தை இஸ்லாம் வழங்குகிறது.

       இதற்கு மேலும் திருமணம் என்பது சாம்பிராணி போடுவதற்கான அனுமதி நிகழ்வு என்று யாராவது வாதிட்டால் பெண்களே சிந்தித்துக்கொள்ளுங்கள்..... உங்கள் வாழ்கையை காத்துக்கொள்ளுங்கள்.

Sunday 11 August 2019

இஸ்லாம் கூறும் பலதார மணத்தில் பெண்ணின் உரிமை

ஏக இறைவன் அல்லாஹ்வின்  திருப்பெயரால்

             இந்த பதிவானது பலதார மணம் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன என்பதை தெளிவாக இஸ்லாமிய சகோதர்ரகளுக்கும் இஸ்லாமிய எதிர்பாளர்களுக்கும் விளக்கவே. பொதுவாக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் பலதார மணம் குறித்து பேசும் போது பெண்ணின் உரிமை பாதிப்பதாகவே வாதிடுவார்கள். மேலும் இதனால் முதல்தாரத்தின் உரிமை பறிக்கப்படுவதாகும் வாதிடுவார்கள். உண்மையில் இஸ்லாமின் பலதார மணம் குறித்த பார்வையை தெளிவு படுத்தினாலே பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எப்படி இஸ்லாம் வரையறுக்கப்பட்ட உரிமைகளையும் கடமைகளையும் வழங்கியுள்ளது என்பது தெளிவாக விளங்கும் இன் ஷா அல்லாஹ்.

இஸ்லாம் கூறும் பலதாரமணம்:

وَإِنْ خِفْتُمْ أَلا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلا تَعُولُوا (٣)

   அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.(அல் குர்ஆன் 4:3)
        இந்த வசனம்தான் ஆண்களுக்கு பலதார மணம் செய்யும் உரிமையை தருகிறது. ஆனால் இந்த வசனம் பலதார திருமணத்தை கட்டாயம் ஆக்கவில்லை. மேலும் பெண்களை திருமணம் செய்ததோடு அவர்களை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற கட்டளையும் சேர்த்து சொல்கிறது.

              இஸ்லாத்தின் அடிப்படை சட்டவாக்கம், சில உரிமைகளை வழங்கும் முன்னர் அதன் தொடர்பாக சில கடமைகளையும் விதிக்கும். அந்த அடிப்படையில் பலதாரமண உரிமையும் அத்தகையதே என்பதை இஸ்லாம் குறித்து தெளிவாகவும், தொடர்ச்சியாகவும் கற்கும் யாரும் புரிந்து கொள்வார்கள்.

    இது தொடர்பாக இஸ்லாமிய எதிர்பாளர்கள் எடுத்து வைக்கும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது " இதனால் முதல் திருமணம் செய்த பெண்ணின் உரிமை பாதிக்கப்படுகிறது" என்பதேயாகும்.

    ஆம் இதனால் முதல் திருமணம் செய்த பெண்ணின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது. ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும் கணவனோடு பகிர்துகொள்வதையும் இழக்கிறாள். ஆனால் இஸ்லாம் இது குறித்த தெளிவான பார்வை கொண்டுள்ளது. பலதார திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்கள் தொடர்புடையது. 

    இதுதொடர்பாக இரண்டாவதாக மணம் முடிக்க தயராக இருப்பவளும் பெண்தான் என்பதை நாம் சிந்திக்க கடமை பட்டுள்ளோம். வரதட்சனை, விதவை மறுதிருமண மறுப்பு போன்ற சமுக அவலம் காரணமாகவும், ஆண் விகிதாசார சரிவு போன்ற நிலையினாலும் இரண்டாம் தாரமாகவாவது வாழ ஒரு  பெண் தள்ளப்படுகிறாள் என்பது நிதர்சனம். ஆக இத்தகைய சுழலில் பலதாரமணம் அனுமதிக்கப்படாமல் போகும் போது விபச்சாரம்,ஓரினச் சேர்க்கை போன்ற சமுக கேடுகள் தலைதூக்கும், ஆக இதை எதிர் கொள்ள பலதாரமணம் ஒன்றுதான் தீர்வாக அமையும். ஒரு பெண்ணின் உரிமையை காட்டிலும் சமூக நன்மை முன்னிறுத்தப்படுகிறது.

இந்த விஷயங்களை இஸ்லாம் கருத்தில் கொண்டும் பெண்களின் மனநிலையை கருத்தில் கொண்டும் இஸ்லாம் சில நிபந்தனைகளை கூறுகிறது. இது தொடர்பாக இஸ்லாமியர்கள் மத்தியிலும் கூட தவறான புரிதல் உள்ளது என்பது உண்மைதான்.   இஸ்லாம் கூறும் நிபந்தனைகள் இவ்விஷயத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் முதல் மற்றும் மற்ற மனைவியின் உரிமைகள் பாதுக்காக்கப்படும். அதனால்தான் நபி(சல்) அவர்கள் திருமண ஒப்பந்தம் குறித்து கூறுகையில் பின்வருமாரு கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும்.இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்: முஸ்லிம் 2772)
   ஆக திருமண நிபந்தனைகளில் பேசப்பட வேண்டிய முக்கியமான சரத்துகளில் இதுவும் ஒன்று. 

மறுதிருமணம் குறித்த நிலைபாடை திருமணத்திற்கு முன்பே இருவரும் முடிவு செய்வது.

        இஸ்லாம் ஒரு ஆண் மறுதிருமணம் செய்வது குறித்த நிபந்தனை பற்றி திருமண ஒப்பந்ததில் முன்பே பேசி தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆண் மற்றும் பெண்ணில் முழு உரிமையும், சமூக நன்மையும் இதனால் காக்கப்படுகிறது. இதை பின் வரும் சம்பவம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

இதற்கான் செயல் வடிவத்தை நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இருந்து பெறலாம்.
அலீ பின் அல்ஹுசைன் (ஸைனுல் ஆபிதீன் - ரஹ்) அவர்கள் கூறியதாவது:
          நாங்கள் (எங்கள் தந்தை) ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட காலத்தில் யஸீத் பின் முஆவியாவைச் சந்தித்துவிட்டு, மதீனாவுக்கு வந்தோம். அங்கு என்னை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் சந்தித்தார்கள்.
        அப்போது அவர்கள், "என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித்தர ஆயத்தமாயிருக்கிறேன்)" என்று கேட்டார்கள். நான் அவர்களிடம், "அப்படி ஏதுமில்லை" என்று பதிலளித்தேன்.
மிஸ்வர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாளை என்னிடம் கொடுக்கிறீர்களா? ஏனெனில்,அந்த (பனூ உமய்யா) கூட்டத்தார் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடமிருந்து அந்த வாளைப் பறித்துக்கொள்வார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை என்னிடம் கொடுத்தால் என் உயிர் போகும்வரை ஒருபோதும் அது அவர்களிடம் போய்ச் சேராது" என்று கூறினார்கள். (பிறகு பின்வரும் சம்பவத்தை விவரிக்கலானார்கள்:)
     ஃபாத்திமா (ரலி) அவர்கள் (தம் துணைவியாக) இருக்கும்போதே, அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அபூஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காதுக்கு எட்டிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது குறித்து மக்களிடம் தமது இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை நான் செவியுற்றேன். -அப்போது நான் பருவவயதை அடைந்து விட்டிருந்தேன்.-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(என் மகள்) ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தனது மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம்முடைய மருமகன் ஒருவரை ("அபுல்ஆஸ் பின் ரபீஆ") பற்றிக் குறிப்பிட்டார்கள்; அவர் (அவருடைய மாமனாரான) தம்முடன் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைப் பாராட்டினார்கள்: அப்போது அவர்கள், "அவர் என்னிடம் பேசினார். (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார்; அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்.
   மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றை தடை செய்யக்கூடியவன் அல்லன்; தடை செய்யப் பட்ட ஒன்றை அனுமதிக்கக்கூடியவனும் அல்லன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதரின் மகளும் இறை விரோதியின் (அபூ ஜஹ்லின்) மகளும் ஒரே இடத்தில் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒருபோதும் ஒன்றுசேர முடியாது" என்று கூறினார்கள். (நூல்: புஹாரி 4841.)
மேலும் ஒரு நபிமொழி பின்வருமாறு கூறுகிறது
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்
                இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, 'ஹிஷாம் இப்னு முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூ ஜஹ்லுடைய) மகளை அலீ இப்னு அபீ தாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்கமாட்டேன். அலீ இப்னு தாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டு, அவர்களின் மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை  வேதனைப்படுவது என்னை மன வேதனைப்படுத்துவதாகும்'' என்று கூறினார்கள்.
நூல்: புஹாரி 5230
        ஆம் ஃபாத்திமா(ரலி) அவர்களின் திருமணத்தின் போது அலி(ரலி) அவர்கள் வழங்கிய வாக்குறுதியை நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய மற்றொரு மகளின் கணவரை சுட்டிகாட்டி நினைவுகூறுகிறார்கள். திருமணத்திற்கு முன்பே நிபந்தனைகள் பேசப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதிஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன. மேலும் பலதார மணம் புரிய நிபந்தனை அற்ற அனுமதி இருக்குமானால், நபி(சல்) அவர்களிடமோ, அல்லது பாத்திமா(ரலி) அவர்களிடமோ அனுமதி பெற வேண்டிய அவசியம் அலி(ரலி) அவர்களுக்கு இல்லை. அவர்களது அனுமதி கோரல் என்பது திருமணம் ஒப்பந்தத்தில் போடப்பட்ட நிபந்தனையின் அடிப்படையில்தான் என்பதை புரிய முடிகிறது.

        இந்த கருத்தை நாம் கூறியதும் “தற்கால் அறிஞர்கள் யாரும் இதை கூறவில்லை என்று கூறி இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் தைய தக்கா என குதிக்கலாம். ஆனால் இதே கருத்தில் முன்சென்ற அறிஞர்கள் இருந்துள்ளனர்.

   ஒரு மனிதன் மறுதிருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்ற நிபந்தனையை ஏற்று இருந்தால் அதை நிறைவேற்றுவது ஆணின் மீது கடமையாகும். அந்த நிபந்தனயை அவர் மீறும் போது அந்த பெண் திருமண ஒப்பதத்தை முறிக்கலாம்.( இப்னு கைய்யிம் ஜாத் அல் மாத்(5/117-118))

      “அப்போது அவர்கள், "அவர் என்னிடம் பேசினார். (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார்; அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்” என்பது அவர் ஜைனப்(ரலி) (நபி(ஸல்) அவர்களின் மகள்) அவர்களை தவிர வேறு பெண் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று அவர் உறுதி மொழி அளித்து இருப்பார். அதையே அலி(ரலி) அவர்களும் செய்திருப்பார். ..(-இப்னு ஹஜரின் ஃபத்ஹுல் பாரி(7/86))

இந்த நிபந்தனையை ஒரு பெண் ஏற்றுகொள்வாளா?

        இது ஒவ்வொரு பெண்ணின் மனநிலை பொறுத்தது. இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டியுள்ளது. அதாவது இரண்டாம் திருமணத்தை ஏற்று கொள்பவளும் பெண்தான். வரலாற்றில் பெண்களின் மனநிலை சர்வாதிகாரி போன்றது அல்ல. அதிக கருணையுடையவர்கள்தான் பெண்கள் என்பது வரலாறு நெடுக காணக்கிடக்கிறது. இன்றைய பெண்ணியவாதிகளில் சிலர் கூறுவது போல் தன் சகோதரியின் தேவை புரியாத கல்லாலான இதயம் படைத்தவர்கள் அல்ல பெண்கள். வரலாறில் ஆண்களின் விகிதத்தில் சரிவு ஏற்படும் காலங்களில் சமுக கேடுகளை தடுக்கும் எண்ணத்தில் பெண்களே முன்வந்து பலதார மணத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள். உதரணமாக ஹம்ப்ரீ என்ற மானுடவியல் வல்லுனர் இது குறித்து ரஸ்யாவில் இஸ்லாமியர் அல்லாத பகுதியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவை கூறுகிறார். அங்கு இருக்கும் படித்த பெண்களும் கிராம்ப்புறங்களில் இருக்கும் பெண்களும் ஆண்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவினால் ஏற்படும் சிக்கலை சரி செய்ய பலதாரமணத்தை அனுமத்திக்க வேண்டும் எங்கின்றனர். என்று ஹம்ப்ரீ ஆச்சரியம் கொள்கிறார்.[1] 

    அரேபியா போன்ற நாடுகளிலும் மேற்குரிய நிலையே காணப்படுகிறது.மேலும் கென்யா போன்ற நாடுகளில் பால்வினை நோயின் பரவலைத் தடுக்க இது ஒரு வழிமுறையாக அங்கிருக்கும் பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர். எலிசபெத் ஜோசப் போன்ற பெண்ணியலாளர்களும் பலதார மணத்தால் தங்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைப்பதால் ஆதரிக்கின்றனர். இப்படி பல வகையான சமுக சுழலை எதிர் கொள்ள பெண்கள் இத்தகைய பலதாரமணத்தை ஆதரிக்கின்றனர். இரண்டாம் தாரமாக வரும் பெண்ணை வேசியாக்கும் சில முதல் மனைவியின் காழ்புணர்ச்சிதான் பெண்ணியவாதிகள் சிலரின் எண்ணமாகவும் இருக்கிறது. ஆனால் பெண்களை சமுக சிந்தனையற்ற சுயநலமிகள் என்ற பெண்ணியவாதிகளின் எண்ணத்தை பெண்கள் தவிடு பொடியாக்கியுள்ளனர் வரலாறு நெடுகிலும் என்பதுதான் உண்மை.

இயற்கையில் பலதாரமணம் சரியானதா:
                   மனித பால் ஈருருமை (Sexual dimorphism =XM/XF) குறியீடு 1.15. அதாவது ஆண் மற்றும் பெண்ணின் உடலில் இருக்கும் வேறுபாடு. எடுத்துக்காட்டாக ஒத்த வயதுடைய ஆண் மற்றும் பெண்ணின் உடல் எடை வளர்ச்சி போன்றவற்றின் விகிதாச்சார குறியீட்டு எண். இந்த எண் அதிகரிக்கும் போது அந்த உயிரினத்தின் ஆண் பாலினம் பலதார தன்மை உடையதாய் இருக்கும்(2)(3). மேலும் ஒரு உயிரினத்தில் சந்ததியின் உருவாக்கத்தில் அதிகம் செலவு செய்பவை ஒருதார குணமுடையதாய் இருக்கும் என்று “EVOLUTIONARY PSYCHOLOGY” கூறுகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும் போது ஆண்கள் பலதார மணம் புரிவதற்கு தகுதி உடையவராகதான் இருப்பார்கள்.(4) 

                மேலும் கத்தொலிக்க மதம் இவ்வுலகில் பரவிய பிறகே பலதார மணம் குற்றமாக கருதும் நிலை ஏற்பட்டது. ஆனால் மனித பால் ஈருருமை குறியீடு 1.15 என்பதால் SLIGHTLY POLYGAMOUS என்று அறிவியல் கூறுகிறது. இதை அடிப்படையாக கொண்டு சிந்திக்கும் போது ஆண்களின் பலதார மணத்தை 4 என்ற அளவிற்கு இஸ்லாம் சுருக்கி இருப்பது அர்த்தமுடையதுதான். சொல்லப்போனால் பலதார மணத்தை இயற்கையாளர் அல்லது நாத்திகர்கள்தான் அதிகம் ஆதரிக்க வேண்டும். ஆனால் இங்கு நிலை தலைகீழாக உள்ளது. பலதாரமணத்திற்கு தடை என்றும் குற்றம் என்றும் அறிவித்த பல நாடுகளில் இது கள்ளத்தொடர்புகளாகவும் விபச்சாரமாகவும் நடைபெறுகிறது. இதில் பில் கிளின்டன் போன்ற அதிபர்களும் அடக்கம். 

ஏன் பெண்களுக்கு பலதார அனுமதியில்லை:

               மனித வரலாற்றில் அதற்கான் தேவை என்றுமே இருந்ததில்லை. என்றும் அதற்கான் தேவை வரப்போவதும் இல்லை.மனித பால் ஈருருமை (Sexual dimorphism =XM/XF) குறியீடு அதைத்தான் உணர்த்துகிறது. மேலும் ஆண் மற்றும் பெண்ணின் விந்து மற்றும் கரு உற்பத்தியின் எண்ணிக்கை வேறுபாடு இந்த கருத்தை வலுவூட்டுவதாய் உள்ளது. (கரு உற்பத்தியில் இருந்தே சந்ததி உருவாக்கத்தின் செலவு பெண்ணுக்கு தொடங்குகிறது. சராசரியாக ஒரு பெண் தனது வாழ்நாளில் 30 சந்ததிகளைத்தான் உருவாக்க முடியும். ஆனால் ஒரு ஆண் 3000 மேற்பட்ட சந்த்திகளை ஏற்படுத்த முடியும். வேறுபாடு இதில் இருந்தே ஆரம்பம் ஆகிறது. இதனால்தான் ஆண்கள் வரலாறு நெடுக பலதார மணம் உடையவராய் இருந்துள்ளனர் என்று அறிவிலாளர்கள் விவரிக்கின்றனர்.

Citations:
1.http://www.theguardian.com/education/2009/oct/27/polygamy-study-russia-central-asia
2.http://web.missouri.edu/~flinnm/courses/mah/lectures/sexdim.htm
3.https://www.irishtimes.com/news/science/are-humans-naturally-monogamous-or-polygamous-1.3643373
4.https://en.wikipedia.org/wiki/Parental_investment
5.https://carta.anthropogeny.org/moca/topics/sexual-body-size-dimorphism?fbclid=IwAR1B2ncomsdLQeOhSU-es-EXV3__nwr_nlVElkyuxZUkHB_VuHDsjHHvpCw
6.https://academic.oup.com/beheco/article/14/6/818/269169?fbclid=IwAR3AiBG7iTuZy6cRzxALqQplEk10POIyh7yaGbNm56U60_v1IkYo6ZDNo6s
7.https://www.nature.com/scitable/knowledge/library/mating-systems-in-sexual-animals-83033427/

Sunday 4 November 2018

பரிணாமம் உண்மையா ஊகமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்


                    பரிணாமம் என்ற அறிவியல் ஆய்வு தொடரினுள் செல்வதற்கு முன்பு ஏன் இந்த தலைப்பு என்பதையும், இந்த தொடரின் கட்டமைப்பு என்ன என்பதையும் தெளிவாக விளக்கிவிட்டால் இந்த ஆய்வு கட்டுரை தொடரை வாசிப்பவருக்கு உதவியாக இருக்கும் என எண்ணுகிறோம். இன்ஷா அல்லாஹ்.

ஏன் இந்த தலைப்பு:

            நாம் இந்த தலைப்பை தொடராக வழங்க வேண்டும் என்ற எண்ணமானது சமூக வளைத்தளங்களில் அதிகமாக கம்பு சுற்றும் நாத்திகர்களாலும், நாத்திக வேடமணிந்த கிறித்தவ மிசனரிகளும் காவிகளும் தோற்றுவித்த்தே. ஆனால் நாம் இங்கு குறிபிட்ட இந்த கூட்டத்தினர் நாம் கண்டவரை அறிந்ததென்னவென்றால் இவர்களுக்கு பரிணாமம் குறித்து எந்த புரிதலும் இல்லை. குறைந்த பட்ச புரிதல் கூட இல்லாமல்தான் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு கூட்டத்தினர் சமூக வளைத்தளங்களில் கதை அளந்து வருகின்றனர். அதே போல் பரிணாமவியலை எதிர்த்து பதிவிடும் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் இஸ்லாமிய அறிஞர்களின் அடியொட்டிய எதிர் கருத்துகளையே பதிகின்றனர். இதற்கான மூல காரணம் நாம் பரிணாமவியல் குறித்த மூல ஆதார நூல்களில் இருந்து கற்காததும், இந்த குறிபிட்ட பரிணாமவியல் என்ற தற்போதைய போக்கு குறித்து மேம்படுத்தல் இல்லை என்பதுமே ஆகும். (எ.டு) ஒட்டங்கச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கான காரணத்தை இஸ்லாமிய அறிஞர்கள் பதிவிடும் போது குட்டை கழுத்திருக்கும் ஒரு உயிரினம் அது தரையில் உணவு இல்லாமல் மேலே இருக்கும் கிளைகளில் இருக்கும் உணவை உட்கொள்ள முயற்சித்ததின் விளைவே என்பார்கள். (பரிணாமவியலில் இந்த உதாரணத்தையும் பாக்டீரியாவின் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு குறித்த உதாரணத்தையும் நாம் பரிணாமவியலின் இந்த தொடரில் அடிக்கடி பயன்படுத்துவோம். ஆக இத்தகைய உதாரணங்கள் கூறப்படும் இடங்களை சற்று கவனத்துடன் கடந்து செல்ல பார்வையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்) ஆனால் இன்றைய பரிணாமவியலாளர்கள் இந்த கருத்தை கொண்டிருக்கவில்லை. இது டார்வினுக்கும் முன்பாக லாமார்க் என்பரால் எடுத்தாளப்பட்ட கருத்தாகும். இதன் பிறகு பரிணாமம் என்பது டார்வின் முதல் இன்றிருக்கும் டாக்கின்ஸ் வரை பல படிநிலை பரிணாமத்தை அடைந்துவிட்டது அடைந்து கொண்டுள்ளது. ஏன் இந்த கட்டுரை தொடர் எழுதி முடிப்பதற்குள் தற்போதைய பல பரிணாம புரிதல்கள் காணாமல் கூட போய்விடலாம். பல புதிய புரிதல் ஏற்படவும் செய்யலாம். ஆக தொடர் அப்டெட்டில் இருப்பது ஆகச்சிறந்தது.

                     ஆக பரிணாமவியலை நாம் நுணுகிப்பார்க்கும் போது அதில் இருக்கும் பல ஓட்டைகள் பட்டவர்த்தணமாய் சாமானியனுக்கும் புரியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதனால்தான் அதில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. உண்மை என்பது விளங்குவதற்கு எளிது அதை நுணுகிப்பார்க்கும் போது. அதுபோல் பரிணாமத்தில் இருக்கும் பல முரண்பாடுகளும் குறைகளும் சாமாணியனுக்கும் விளங்கும்படி செய்வதே இந்த கட்டுரை தொடரின் நோக்கமாய் இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் நிச்சயம் இந்த தொடரின் இறுதியில் இது ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

இந்த தொடரின் கட்டமைப்பு:

                      ஆக நமது குறிக்கொளான மக்கள் விழிப்புணர்வு மற்றும் விமர்சனம் இரண்டையும் நிறைவேற்றும் விதமாக இந்த தொடர்கள் அமையவுள்ளன இன்ஷா அல்லாஹ். பரிணாமவியலின் அடிப்படை கோட்பாடுகளை விளக்கி அவற்றுள் எழும் விமர்சனங்களை ஆதாரப்பூர்வமாய் எடுத்துரைக்கும் விதமாக இந்த தொடர்கள் அமையவுள்ளன. ஆக தொடர்களை வரிசை மாறாமல் தொடர்ந்து படிக்குமாறு பார்வையாளர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர் 1: பரிணாமம் உண்மையா ஊகமா?

                                             அல்லாஹ்வின் திருப்பெயரால்.........

 பரிணாமம் டார்வினுக்கு முன்

            பரிணாமம் குறித்து விளங்குவதற்கு அதன் வரலாற்று பார்வையை முதலில் நாம் அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். அனைவரும் பரிணாமம் குறித்து ஓரளவிற்கு அறிந்திருந்தாலும் அதன் கட்டமைப்பை புரிந்து கொள்ள பரிணாமம் குறித்த வரலாற்றை அறிந்து கொள்வது சிறந்த வழியாகும். இன்ஷா அல்லாஹ் அதன் வரலாறு குறித்து நாம் பார்ப்பதற்கு முன்பு பரிணாமம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

பரிணாமம் என்றால் என்ன?
          பரிணாமம்(Evolution) என்பதற்கு மாற்றம் என்பது நேரடி பொருளாகும். ஒரு உயிரினத்தின் சந்ததி தோறும் வடிவம், நடத்தை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றமே பரிணாமம் என எளிமையாக பொருள்படுத்தலாம். பரிணாமம் ஒரு உயிரினத்தின் அனைத்து நிலையிலும் அதாவது டி.என்.ஏ(DNA) வில் துவங்கி சமூக நடத்தை ஆகிய அனைத்திலும் பரிணாமம் மாற்றத்தை ஏற்படுத்துவதாக பரிணாமவியலாளர்கள் கூறுகின்றனர். சமிபத்தில் ஹாரிசன்(2001)ல் பரிணாமத்தை காலம் தோறும் மாறுபாட்டுடனான சந்ததி வழியாக ஏற்படும் மாற்றம் என வரையறுக்கிறார். (EVOLUTION BY MARK RIDLEY P.NO.5)

பரிணாம காலவரிசை ஒரு பார்வை;

         பரிணாமவியல் பல நூற்றாண்டுகளாய் மனித வரலாற்றில் பல பரிணாமம் அடைந்து வந்திருக்கிறது. அதனை முன்மொழிந்தவர்களில் சில குறிப்பிடத்தகுந்த நமது ஆய்விற்கு தேவை படுபவற்றை மட்டுமே மேலோட்டமாக காணவிருக்கிறோம். 

      கிரேக்க தத்துவவியலாளர் ஆன தேல்ஸ் உயிரினங்கள் நீரில் இருந்து தோன்றி படிப்படியாக பல்கிப்பெருகின என்ற கருத்தை முன்வைத்தார். அனாக்ஸிமெண்டர்  இன்றைய பரிணாமவியலின் தந்தை என்று கூறலாம். அவர்தான் உயிர்கள் படிநிலைகளில் ஈரப்பதத்தில் இருந்து தோன்றுகின்றன. மேலும் மனிதன் வேறு ஒரு உயிரினத்தில் இருந்து பரிணமித்தவன் என்ற கருத்தை முன்வைத்தார். இதுபோல் எம்படோக்ல்ஸ், எபிக்கூயூரியஸ் போன்றவர்களின் வாதங்களின் வேர்களையும் டார்வினின் தத்துவங்களில் காணமுடியும். இவ்வாறு உயிரினங்களில் தோன்றும் மாற்றங்கள் யாவும் எதேச்சையானவை, எதுவும் முன் நிர்ணயிக்கப்பட்டதில்லை என்ற கருத்தை முன்வைத்தனர். இன்றிருக்கும் பரிணாமவியலாளர்கள் கூறுவது போல் மாற்றங்கள் யாவும் வருங்கால பயன் நோக்கியதல்ல என்ற கருத்தை அக்கால கிரேக்க தத்துவ்வியாளர்களில் ஒரு பகுதியினர் கொண்டிருந்தனர்.

          இதற்கு எதிர் கருத்தை கொண்டிருந்த, அதாவது மாற்றங்கள் யாவும் பயன் நோக்கியது அல்லது முன் நிர்ணயிக்கப்பட்டது என்ற கருத்தை முன்வைத்த அணியிலும் குறிப்பிடும் படியான கிரேக்க தத்துவவியாளர்கள் இருந்தனர். இவர்கள் இயல்திட்ட வாதத்தை(Teleology) முன்வைத்தனர். அதாவது இயற்கையில் உயிர்களில் தோன்றும் இத்தகைய மாறுதல்களின் காரண காரிய தொடர்புகள் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. இறுதி விளைவு நோக்கிய ஒரே மூலத்திட்ட அமைப்பின் கூறுகளே என்று வாதிட்டனர். ஹெராகிளிடஸ் போன்றவர்கள் இது கடவுளின் திட்டம் என வாதிட்டனர்.

      அதே போன்று அரிஸ்டாட்டில் , பிளாட்டோ போன்றவர்கள் இயல்திட்ட வாதத்தை முன்வைத்தனர். அதாவது மனிதன் என்ற உயரிய படைப்பு நோக்கின் தோல்வியுற்ற சோதனைகளின் விளைவுதான் ஏனைய உயிரினங்கள் என்ற கருத்தை கொண்டிருந்தனர். இயல்திட்ட வாதங்களின் எண்ண ஓட்டங்கள்தான் லாமார்க்கின் தத்துவங்களில் காண முடியும். இந்த வகை பரிணாம கோட்பாடுகளை லாமார்க்கிஸம் என்று இன்றைய நவீன டார்வினிஸ்ட்களால் கூறப்பட்டு மறுக்கவும் படுகிறது. ஆனால் உண்மையில் பரிணாமவியலின் பல கொள்கைகள் இந்த லாமார்க்கின் கோட்பாட்டின் அடியொட்டி பயணிக்கும் நிலையில் தான் இருக்கிறது என்பது வரும் தொடர்களில் இன்ஷா அல்லாஹ் நாம் புரிந்து கொள்வோம்.........

தற்கால பரிணாமவியலின் ஆரம்பம்: 



      ஹட்டன் (1795) என்ற நிலவியலாளர் படிப்படியாக முடிவை அடையும் கொள்கையை (Gradualism) முன்வைத்தார். நிலமானது பல படிநிலைகளில் சிறுமாற்றங்களால் நிலவியல் அமைப்புக்களான மலை, ஆறு போன்றவற்றை தோற்றுவிக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார். அதுவரை செல்வாக்குடன் இருந்த அழிவமைவு கோட்பாட்டை(Catastrophism) மறுத்தார். அதாவது மாபெரும் வெள்ளங்களும், நிலநடுக்கங்களும் மேலும் அது போன்ற பேரழிவுகளுமே நிலவியல் அமைப்பை தோற்றுவித்தன என்ற கோட்ப்பாடை மறுத்தார். எப்படி நிலவியல் மெதுவான சிறு சிறு மாற்றங்களால் நில அமைப்புகளை தோற்றுவிக்கின்றதோ அதே போல் மாறுபட்ட உயிரினங்கள் ஒரு உயிரில் இருந்து சிறு சிறு மெதுவான மாற்றங்களால் தோன்றின என்ற கருத்தை முன்வைத்தார்.

     
 

சார்லஸ் லையல்(1830) : டார்வினின் நண்பர். இவரும் படிப்படியாக படிவளர்ச்சியால் முடிவை அடையும் கொள்கையை (Gradualism மறுவடிவமான Uniformitarianism) முன்வைத்தார். இவர் டார்வினின் இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம் (Origin of Species by Natural Selection) வெளிவர பெரிதும் உதவியாக இருந்தார்.

 

பரிணாமவியலாளர்களுக்கு ஒவ்வாத அழிவமைவுக் கோட்பாடு: 

 

    படிவளர்ச்சி கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை அழிவமைவு கோட்பாடாகும். இதை முன்பே விளக்கியது போல் இது பேரழிவுகளே நில அமைப்புக்களை தோன்றுவதற்கு காரணமாயின். இதுதான் வேறுபட்ட உயிர்கள் தோன்ற காரணமாயின என்ற கருத்தை முன்வைத்தது. புகழ்பெற்ற பக்லேண்ட், கூவியர் போன்ற நிலவியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கோட்பாடாகும். இந்த கோட்பாடானது பரிணாமவியலாளர்களும் பெரிது ஒவ்வாமையை ஏற்படுத்த மூலகாரணம்:

1)இந்த கோட்பாட்டை தூக்கிப் பிடித்தால் அன்றிருந்த கிறித்தவர்கள் கூறுவது போல் இவ்வுலகம் தோன்றி 5000 ஆண்டுகள்தான் ஆகிறது என கூறப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

2) ஒரு திடீர் செயல்பாடு ஒரு உயிரினத்தை அழித்து வேறு ஒரு உயிரினத்தை தோற்றுவிக்கும் என்ற கொள்கையை இந்த கோட்பாடு முன்வைப்பதால், இந்த இயற்கை நிகழ்வுகள் யாவும் முன்முடிவு செய்யப்பட்ட ஒரு விசயத்திற்காக நிகழ்கிறது என்ற தோற்றத்தை அது ஏற்படுத்துகிறது. ஆக இறைமறுப்பை முன் நிறுத்தும் பரிணாமவியலாளர்களால் இந்த கோட்பாட்டை ஜீரணிக்க சிறிது சிரமமாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. இத்தகைய காரணங்களின் சாயல் லேசாக தெரிவதால்தான் லாமார்க்கின் கோட்பாடே மறுக்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்த கோட்பாடெல்லாம் முடிவு நிர்ணயிக்கப்பட்டதாக கூறுகிறதோ அவையெல்லாம் இன்றைய டார்வினிஸ பரிணாமவியலாளர்களுக்கு ஒவ்வாத கோட்பாடாக ஆகிவிடும். ஏனென்றால் அவை அறிவார்ந்த இறை( Intelligent Creator) குறிபிட்ட நோக்கத்திற்காக நிகழ்வுகளை தோற்றுவிக்கிறார் என்ற கொள்கைக்கு இட்டுச்சென்றுவிடும் என்ற பயம்தான்.

      ஆனால் விதி அவர்களை விடுவதாக வில்லை. இன்றும் இந்த கோட்பாட்டின் விளைவுகளை படிமங்கள்(fossil) கொண்டிருக்கின்றன. டைனோசர் போன்ற உயிர்களின் பேரழிவிற்கு இத்தகைய இயற்கை சீற்றங்களே குறிப்பாக விண்கல் மோதலே காரணமாக யூகிக்கப்படுகிறது.   
(ஆனால் டைனோசரின் சமகாலத்தில் வாழ்ந்த உயிர்கள் இன்றும் வாழும் படிமங்களாக பூமியில் வாழ்கின்றன என்பது நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று)

           பல ஆயிரம் ஆண்டுகள் நிலவியல் மாற்றங்களை சில மணிநேரங்களில் சுனாமி, நிலநடுக்கம், விண்கல் மோதல் போன்ற இயற்கை சீற்றங்கள் தோற்றுவித்துவிடுவதும், அதை இன்றும் நாம் காண்முடிவது பரிணாமவியலாளர்களை சற்று உறுத்தத்தான் செய்கிறது. ஆனால் இதில் கூத்து என்னவென்றால் இதே போன்ற திடீர் வெடிப்புக்கள் உயிர் அழிவுகள் அல்ல உயிர் தோற்றங்கள் உயிர்படிமங்களிலும் (fossil) காணப்படுவது படிவளர்ச்சி கொள்கையை போற்றும் பரிணாமவியலாளர்களுக்கு சம்மட்டி அடிதான். ஆனால் இதே நிலைதான் பரிணாம கோட்பாட்டின் மையத்திலேயே இருக்கிறது என்பதை இன்ஷா அல்லாஹ் வரும் தொடர்களில் காண்போம்.

Wednesday 11 July 2018

எதிர்தொடர்: 30,31 சுவனத்து சுகங்கள்

ஏக இறைவன் அல்லாஹ்வின்  திருப்பெயரால்......

      அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாம் எதிர்தொடரில் தன்னை முன்னாள் முஸ்லீம்?????? என கூறிகொள்ளும் ஒரு அரைவேக்காட்டு கட்டுரையாளரின் தொடர் கட்டுரைகளுக்கு பதில் அளித்து வருகிறோம். இம்முறை கட்டுரையாளர் எப்போதும் போல கிறித்தவ மிசனரிகளின் கட்டுரைகளை சுட்டு மொழியாக்கம் செய்து விட்டுள்ளார். இந்த முறை கட்டுரையாளர் எடுத்துக்கொண்ட பொருள் இஸ்லாம் கூறும் மறுமை வாழ்க்கை(1) என்பதாகும். கட்டுரையாளாரின் ஒவ்வொரு கருத்தியல்களின் மூடத்தனைத்தையும் இந்த கட்டுரையில் தோழுரிப்போம் இன்ஷா அல்லாஹ்

தொடங்கும் போதே உளரல் ???????
     என்றும் இந்த கட்டுரையாளர் இவர் உருவாக்கும் கட்டுரையின் மையப்பொருள் தனதாக காட்டிக்கொள்ள தனது மனதில் தோன்றும் சப்பை வாதங்களை கட்டுரையின் ஆரம்பப் பகுதியிலேயே முன்வைப்பார். அது போன்ற ஒரு உளரல்தான் பின்வருவது.
     //வீட்டுவாடகை, School fees, collage fees, Ration கடை, பருப்பு, பாமாயில், கரண்ட பில் என்ற எந்த கவலையும் சொர்கத்தில் உங்களுக்கு இருக்காது. பஸ்ஸை பிடிக்க வேண்டும், இரயிலைப் பிடிக்க வேண்டும், கல்யாணத்திற்குப் போக வேண்டும், காது குத்திற்குப் போக வேண்டும் Hospital  போக வேண்டும் என்ற பிடுங்கல்களும் இருக்காது.                      அல்லாஹ்வை தொழ வேண்டும், முஹம்மதுவிற்கு பல்லக்கு தூக்க வேண்டும்,  என்ற எந்த வழிபாடுகளும் கிடையாது. பொறாமை, கோபம், விரோதம் போன்ற  தீய எண்ணங்களும் சொர்க்கவாசிகளின் மனதைவிட்டு அகற்றி விடுவதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
பிறகு என்னதான் இருக்கிறது?
    இவ்வளவையும் மனிதனைவிட்டு நீக்கிய அல்லாஹ் மிக முக்கியமான ஒன்றை அதிகரிக்கச்செய்கிறான். அதுதான் Sex.  மனிதனின் உடற்பசியை மட்டும் ஒரு காலத்திலும் அவனை விட்டு விலக விடுவதில்லை. மாறாக மேலும் அதிகரிக்கவே செய்கிறான். சொர்கத்தில்  மனிதனுக்கு இருக்கும் ஒரே பணி  Sex…  Sex…முடிவில்லாத  சல்லாபங்கள்.
     அதற்கு விருந்தாக, கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி, மான்விழி ஹூர் எனும் பேரழகிகள். மறுமையின் வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச வெகுமதிகளாக 80,000 பணியாட்களும், உலகில் அவர்களுடன் வாழ்ந்து மறுமையிலும் வெற்றி பெற்ற  அவர்களது மனைவியர்களுடன், எழுபதிற்கும் மேற்பட்ட ஹூருலீன்களும்  வழங்கப்படுவார்கள்.//

சுவர்கத்தில் சுகங்கள் எதற்கு?????

நமது பதில்:
     இவரது இந்த குற்றச்சாட்டு இவர் எந்த அளவிற்கு மனித உளவியல் மற்றும் உடற்கூறியல் குறித்து புரிந்துவைத்துள்ளார் என காட்டுகிறது. அதே நேரத்தில் மனிதனை படைத்த இறைவனின் வார்த்தைகள் எப்படி அவனது படைப்பிற்கான சுகங்களை மிகத்துல்லியமாக வரையறுத்து கூறுகிறது  என்பதையும் அதன் இம்மை மறுமை தேவையின் அவசியத்தை எவ்வாறு விளக்குகிறது என்பதையும் காணும் போது நாம் ஆச்சரியபடாமல் இருக்க முடியவில்லை.

     அதாவது மனிதனின் தேவைகள் குறித்த இன்றைய உளவியல் பார்வை என்ன கூறுகிறதோ அதைத்தான் இஸ்லாம் முன்வைக்கிறது. மனிதனின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் இந்த தேவைகள்தான் மனிதனை இயக்குகின்றன. இந்த தேவைகளைத்தான் மறுமையில் அல்லாஹ் நிறைவேற்றுவதாக குறிப்பிடுகிறான். இது குறித்து மாஸ்லாவின் “ the Theory of motivation/ needs” பின்வரும் படத்தால் விளக்கப்படுகிறது. இதில் இடம் பெறும் முதல் நிலையில் இருக்கும் அடிதட்டு பிரிவானது (Physiological Needs) அனைத்து உடல் தேவைகளையும் உள்ளடக்கியது. அதில் உடல் உறவும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடதக்கது.


      அதாவது மனித தேவைகளில் அனைத்தும் சுவர்கத்தில் நிறைவேறுவதை நாம் காணமுடியும். ஆக இத்தகைய ஊக்கிகளை கொண்டுதான் மனித செயல்பாடுகளை தூண்ட முடியும். மனிதனை நன்மை செய்ய தூண்டும் அல்லாஹ் இத்தகைய மனித தேவைகள் அறிந்தே அவனது மறுமை வாழ்க்கைக்கான பரிசுகளை நிர்ணயித்துள்ளான். ஆக மனிதன் பிற மனிதனுக்கு செய்யும் உதவிகள், தனிநபரின் கடமைகள் என பலவற்றை கடமையாக்கிய அல்லாஹ் அத்தகைய செயல்பாட்டை தூண்ட அவனது தேவைகளை நிறைவேற்றுவதாக வாக்களிக்கிறான். எந்த தேவையும் இன்றி மனிதன் இந்த சமுகத்திற்கு எந்த பயனும் அளிக்கமாட்டான் என்பதை அறிந்த படைப்பாளன் அதை தோற்றுவிக்க மனிதனின் முதன்மை தேவைகளை சிரமமின்றி அடைய வழிவகுப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு இவ்வுலக வாழ்வின் தியாகங்களை பகராகமாக கேட்கிறான் அவ்வளவே.  மனித தேவைகள் குறித்து மேல்குறிபிட்ட உளவியல் ஆய்வின் அடிப்படையில் ஆய்வு செய்தோம் என்றால் குர்ஆனிலும், ஆதாரப்பூர்வ ஹதீஸிலும் ஏராளமாக சான்றுகளை காணலாம் மேலும் சுவர்கத்தில் செக்ஸ் மட்டுமே வழங்கப்படுவதாக கட்டுரையாளர் மிகைபடுத்தி கதை அளந்துள்ளார். அது ஒரு பகுதி மட்டுமே.

    சுவர்க்கத்து உணவு மற்றும் பானம் குறித்து ஏராளமாக இடம் பெறுகிறது குர்ஆனில். சுவர்கத்து மாளிகைகள் பற்றியும் குடியிருப்புகள் பற்றியும் காணமுடியும். உடைகள் குறித்தும் கூறுகிறது. அது ஏனோ கட்டுரையாளரின் கா(ம)மாலை கண்ணுக்கு தென்படவில்லை.

  1. சுவர்கத்தில் உணவு மற்றும் பாணம் குறித்து : 20:118, 13:35, 20:119, 52:22, 56:21, 47:15, 38:51, 43:73, 19:62,37:45-48, 52:23, 56:18,19, 83:25-28, 2:25, 36:57, 37:42, 52:22, 55:68, 78:32, 56:20, 69:23, 76:14, 76:5, 76:17,  உடைகள் குறித்து: 18:31,22:23,35:33, 44:53, 55:54, 76:12, 76:21 குடியிருப்புகள்: 9:72, 13:29, 39:20, 61:12 உறக்கம் பற்றி: 25:24  
  2. பாதுகாப்பு : 2:25,2:82,3:107,3:136,4:13, 4:122, 5:85, 7:42, இன்னும் ஏராளமான வசனங்கள்.
  3. அன்பு பாசம், நட்பு, காதல்: தோழர்கள்: 4:69, 7:43, 15:47, பெற்றோர்கள் மற்றும் சந்ததிகள்: 13:23,
  4. துணைகள்: 2:25, 3:15,4:57, 37:48,49, 38:52, 44:54, 52:20, 55:56.57, 55:70-84, 56:22,23,56:35, 78:32, 36:56,
  5. இதுவல்லாத ஏனைய தேவைகள் சுவர்க்கவாசிகளுக்கு சுவர்கத்தில் நுழையும் போதே நிறைவேறுகிறது.

       ஆக சுவர்கத்து சுகங்களில் ஒரு சிறு பகுதிதான் செக்ஸ் என்பது மேற்குறிபிட்ட வசன எண்ணிக்கையின் ஒப்பீடே சராசரி மனித புரிதலுக்கு போதுமானது. மேலும் ஹதீஸ்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. மனித உளவியலின் தேவை அமைப்பை அடிப்படையாக கொண்டே இந்த வசனங்கள் அமைந்திருப்பது நிச்சயம் மனிதனின் படைப்பாளனைடம் இருந்து இந்த மார்க்கம் வந்திருக்கும் என்பதற்கும், இன்றைய மனித தேவை உளவியல் குறித்த புரிதலுக்கு அடித்தளமாய் அமைந்திருப்பது குர்ஆனும் ஹதீஸும் என்பது மிகையல்ல. மேலும் மனித மூளையின் கட்டமைப்பை காணும் போது இத்தகைய பரிசு பெறுவதை ஊக்குவிக்கும் pleasure /reward system - இந்த ரிவார்ட் சிஸ்டங்கள் செரடோனின், டோப்பமின் போன்ற மகிழ்ச்சி வேதிகளை சுரக்கவைக்க மனிதனை தூண்டுவதாக உள்ளது. இதற்காக மனிதன் செயலாற்றக்கூடியவனாகவும் இருக்கிறான். இவை அனைத்தும் இந்த மார்க்கம் ஒப்பற்ற படைப்பாளனின் மார்க்கம் என்பதற்கு போதிய சான்று. இத்தகைய உந்துதலே இன்றும் மக்களை இஸ்லாம் நோக்கி ஈர்ப்பதிலும், மக்கள் நிலைத்து இருப்பதிலும் பெரும் பங்காற்றுவதாய் இருக்கிறது. மேலும் கட்டுரையாளர் கூறுவது போல் இவை அனைத்தும் சிற்றின்ப கேலிக்கை என்றால் கட்டுரையாளரை மனித உளவியல் குறித்து எந்த அடிப்படையும் தெரியாத ஒருவராகவே யூகிக்க தோன்றுகிறது. 


    தங்கத்தட்டுகளும் கட்டுரையாளரின் மூலாமும்
          சொர்க்கத்தில் இருக்கும் தங்கத்தினால் ஆன தட்டுக்கள் குறித்த தனது விமர்சனத்தை முன்வைதுள்ளார். சுவர்கத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது அங்கு எதற்கு தங்கத்தினால் ஆன தட்டுகள் ,அங்கு செலவுகள் இருக்காது எதற்கு அங்கு தங்கம் தேவை போன்ற அற்புதமான ???? கேள்விகளை முன்வைத்துள்ளார் எதிர் கட்டுரையாளர். ஆனால் இங்கு ஒரு உண்மையும் சேர்த்து கூறியுள்ளார். அதாவது தங்கம் என்பது அரிய உலோகம் என்பதையும் கூறியுள்ளார். முதலில் தங்கம் என்பது அரிய உலகோம் அதை சுவர்க்கத்தில் இருப்பவர்கள் பலர் இவ்வுலகில் இருந்த காலத்தில் தட்டாகவும் குவளையாகவும் பயன்படுத்தி இருக்கமாட்டார்கள். அதாவது சுவர்க்கத்தில் இருப்பவர்கள் பலர் இவ்வுலகில் ஏழையாக இருந்தவர்கள் என நபி மொழி கூறுகிறது. ( அந்த செய்தியை கட்டுரையாளர் தனது கட்டுரையிலேயே மேற்கோள்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது) அவர்கள் அரிய பொருளாக ஏங்கி இருந்தவை சமமாக அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. அடுத்ததாக ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது சுவர்க்கத்தின் ஒரே தரத்தில் இருப்பவர்களிடத்தில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம் ஆனால் மொத்தமாக மறுமைவாழ்க்கையின் நிலை அதுவல்ல. அங்கு நரகிற்குறியவர்கள் இருப்பார்களே....அவர்களை விட சுவர்க்கம் எவ்வளவு உயர்ந்தது என்பதை கட்டுரையாளர் உரைக்கும் வசனங்கள் எடுத்து காட்டுகின்றன. இந்த அடிப்படையான புரிதலே கட்டுரையாளருக்கு இல்லை எனும் போது இவர் குர்ஆனை தேடினேன் படித்தேன் என கூறுவது எல்லாம் சுத்த கட்டுக்கதை.

    சுவர்கத்தில் துணைகள்:

        சுவர்கத்தில் ஆண்களுக்கு வழங்கப்படும் ஹூருல்யீன்கள் பற்றி இஸ்லாம் குறிப்பிடும் வசனங்களையும், ஹதீஸ்கள் சிலவற்றையும் பதிந்து அல்லாஹ் சுவர்கத்தில் செக்ஸை மட்டுமே கொடுக்கப்போவதாக தனது கட்டுரையின் பெரும் பகுதியில் கூறியிருக்கிறார் கட்டுரையாளர். சுமார் 6666 வசனங்களில் சுமார் 6 வசனங்கள்தான் கட்டுரையாளரின் கண்ணில் தென்பட்டிக்கிறது. அதாவது 0.1% கூட இந்த வசன்ஙகள் இல்லை என்பது சிறிது சிந்திக்க வேண்டிய விஷயம். நாம் முன்பே விளக்கிவிட்டோம் மனித தேவையின் இயல்பை. ஆக சுவர்கத்தில் வழங்கப்படும் துணைகள் என்பது தர்க்க ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், அறிவியல் மற்றும் பகுத்தறிவின் அடிப்படையிலும் மிகச்சரியானது. இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்ன வென்றால். கட்டுரையாளரின் அறியாமையின் உச்சத்தைதான். அதாவது கட்டுரையாளர் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் தனது சான்றுக்கு பதிந்தவர் விளக்கவுரையின் சில பகுதிகளையும் பதிந்துள்ளார். விளக்கமாக இருப்பதுதான் விளக்கவுரை. அந்த விளக்கவுரையில் ஏனைய வசனங்கள் விளக்கப்பட்டது போல மேற்குறிபிட்ட வசனங்களும் விளக்கப்பட்டுள்ளது. இதில் எந்த தவறும் இல்லை. விளக்கமாக இருந்தால்தான் விளக்கவுரை (தஃப்ஸீர்) என்பதை கட்டுரையாளர் ஏனோ மறந்துவிட்டார். சரி நாம் கட்டுரையாளரின் கேள்விகள்??? ஒவ்வொன்றிற்கும் பதில்களைக் காண்போம்.

    கள்ளத்தொடர்பால் பெண்கள் சுவர்கத்தில் குறைவா? கட்டுரையாளரின் கருத்து திரிபு:

         இவரது இத்தகைய வாதங்களைத்தான் நாம் கருத்து திரிபு என கூறுகிறோம்அதாவதுநரகத்தில் அதிகமான பெண்களை கண்டதற்கு நபி(சல்அவர்கள் இவர் கூறும் காரணத்தைகூறவில்லைஇதோ பின் வரும் செய்தி இதை தெளிவாக விளக்குகிறது.

    புகாரி 1052. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
                  நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்போது தொழுதார்கள். ...........மேலும் நரகத்தையும் கண்டேன். அதை விட மோசமான காட்சியை ஒருபோதும் நான் கண்டதில்லை. மேலும் நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன்என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அது ஏன்என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'பெண்கள் நிராகரிப்பதன் காரணத்தினால்என்று விடையளித்தனர்.'அல்லாஹ்வையோ நிராகரிக்கிறார்கள்என்று கேட்கப்பட்டதற்குக் 'கணவனை நிராகரிக்கிறார்கள்காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவிகள் செய்து உன்னிடம் ஏதேனும் ஒரு குறையைக் கண்டால் உன்னிடம் எந்த நன்மையையும் நான் காணவில்லை என்று கூறி விடுவாள்என்று விடையளித்தார்கள்.

        ஆக இவர் கூறும் காரணம் எல்லாம் இஸ்லாம் பெண்களின் கண்ணியத்தை சீர்குலைக்கிறதுஅல்லது இழிவுபடுத்துகிறது என்று அவதூறு பரப்பத்தான்மேலும் பெண்களின் கண்ணியத்தைகாப்பது குறித்து கம்யூனிசத்தை போற்றும் இவர்களை போன்ற கட்டுரையாளர் கூற எந்ததகுதியும் இல்லைபெண்களை போகப் பொருள்களாகப் பயன்படுத்தி அதை கொண்டு உளவுபார்க்க தயார் படுத்தியவர்கள் இந்த நாத்தீக கம்யூனிஸ்ட்களும் , கிறித்தவர்களும் என்பதைஇவ்வுலகம் என்றும் மறக்காதுஅதை வைத்தே தங்களது உளவு நிறுவனங்கள் மிக சக்தி வாய்தவை என தம்பட்டம் அடித்துக்கொள்வதும் உலகம் அறிந்தது.

          அடுத்ததாக விபச்சாரம் செய்யும் ஆண்களையும் நரகில் கண்டதாக நபி(சல்அவர்கள்கூறினார்கள்

    புகாரி 1386. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
            நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்எனக் கூறுவார்கள்.
    ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் இது என்ன?என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும்'நடங்கள்என்றனர். அப்படியே நடந்தபோது அங்கு ஒருவர் மல்லாந்து படுத்திருந்தார். அவரின் தலை மாட்டிலே பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர்அதைக் கொண்டு அவரின் தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே 'இவர் யார்?' என கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்" என்றனர். எனவே நடந்தோம். அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தன. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. நெருப்பின் உஷ்ணம் அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியிலுள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும்பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான்'இவர்கள் யார்?' எனக் கேட்டேன் அதற்கும் அவர்கள் 'நடங்கள்எனக் கூறி விடவே....................அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள்................
         ஆக ஆய்வாளர் எந்த விதத்திலும் இந்த இடத்தில் சரியான முழுமையான தேடலைமேற்கொள்ளவில்லைவெறும் காழ்புணர்ச்சியால் கண் தெரியாத வாதங்களாகத்தான்கட்டுரையாளரின் வாதங்கள் விளங்குகின்றன.

    சுவர்கத்தில் திருமணங்கள் இல்லையா:
      சுவர்கத்தில் திருமணங்கள் இல்லை என வாதிட துவங்கிய கட்டுரையாளர் அதே கட்டுரையிலேயே சுவர்க்கவாசிகள் திருமணம் செய்விக்கப்படுவார்கள் என முன்னுக்குப்பின் முரணாக உளருவதே இந்த குற்றச்சாட்டு எந்த அளவிற்கு பலவீனமானது என்பதை அறிய முடியும்.

    அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.
    كَذَلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ (٥٤)
         இவ்வாறே (அங்கு நடைபெறும்மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்துவைப்போம்.(al quran 44:54)

       ஆக கட்டுரையாளர் தனது மனதுக்கு பட்டதையெல்லாம் உளறி அதற்கு இஸ்லாமிய முலாம் பூச முனைகிறார் என்பதற்கு மேற்குறிபிட்ட சான்றே போதுமானது.

    கட்டுரையாளரின் தப்பு கணக்கு:

    // ஒரு நாளைக்கு நூறுமுறை என்றால், மறுமை வெற்றியாளர்கள் சுமார் பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை RECHARGE செய்யப்பட்டு ஹூருலீன்களை ‘வெற்றி கொள்ள களத்திற்கு’ அனுப்பப்படுவார்கள்.//

    நமது பதில்:
         கட்டுரையாளர் எவ்வளவு அறியாமையில் உள்ளார் என்பதற்கு மேற்குறிபிட்ட கட்டுரையாளரின் கணக்கு???? போதிய சான்று. அதாவது பூமியின் ஒரு நாளைக்கு 1440 நிமிடங்களாக கணக்கிட்டால் இப்படிதான் இருக்கும். ஆனால் சுவர்கத்தில் நாளின் அளவு 24 மணிநேரம் அல்ல என்பது ஏனோ அடிக்கடி கட்டுரையாளர் மறந்துவிடுகிறார். சுவர்கத்தில் ஒரு நாள் என்பது 1000 வருடங்களுக்கு நிகரானது. அங்கு 1000 பூமி வருடத்திற்கு நிகரான ஒரு நாளைக்கு 100 முறை என்பது மிக குறைந்த அளவு. அதற்கு ஏற்றார் போல் நமது உடல் வலிமை, உணவு உட்கொள்ளும் முறை, ஆசை அனைத்தும் மாற்றியமைக்கப்படுகிறது. அதைத்தான் பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.


     19333 حدثنا عبد الله حدثني أبي ثنا وكيع ثنا الأعمش عن ثمامة بن
    عقبة المحلمي قال سمعت زيد بن أرقم يقول قال لي رسول الله صلى الله عليه وسلم : ان الرجل منأهل الجنة يعطى قوة مائة رجل في الأكل والشرب
    والشهوة والجماع فقال رجل من اليهود فان الذي يأكل ويشرب تكون له
    الحاجة قال فقال له رسول الله صلى الله عليه وسلم حاجة أحدهم عرق يفيض من جلده فإذا بطنه قدضمر
    تعليق شعيب الأرنؤوط : حديث صحيح
    ஜைத் பின் அர்காம்(ரலி) அறிவித்ததாவது:
         அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் “சுவர்க்கத்தில் இருக்கும் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உண்பதிலும், பருகுவதிலும், இச்சை கொள்வதிலும், உடலுறவு கொள்வதிலும் நூறு மனிதர்களின் ஆற்றல் வழங்கப்படும்” என்று கூறினார்கள். யூதர் ஒருவர் “உண்பவரும் பருகுபவரும் கழிக்க வேண்டுமே!” என்று கூறினார். அதற்கு நபி(சல்) அவர்கள் “சுவர்க்கவாசிகளில் ஒருவரின் கழிவு என்பது தோலில் இருந்து வெளியேறும் வியர்வைதான், பிறகு மீண்டும் அவரது வயிறு சுருங்கிவிடும்” என்று அவருக்கு பதிலளித்தார்கள் (நூல்: முஸ்னத் அஹ்மது 18509/19333)

           இதில் நூறு பேரின் ஆண்மை பலம் என்பது 1000 வருடங்களில் 100 முறை உறவில் ஈடுபடும் போது நேரத்தை நிடிப்பதற்கான பலம் அவ்வளவே. அதைப்பற்றிதான் விளக்கவுரைகள் கூறுகின்றன. அதாவது சுவர்க்கத்தின் ஒரு நாளின் கால அளவை அடிப்படையாக கொண்டு மனித உடலியல் மாற்றியமைக்கப்படுகிறது. இதில் எங்கிருந்து கட்டுரையாளர் கூறுவது போல் ஆபாசம் வருகிறது. மேலும் சுவர்கத்தில் இன்னும் பல செயல்பாடுகளை சுவர்க்கவாசிகள் செய்வார்கள் என குர்ஆனும் ஹதீஸும் பட்டியலிடுகிறது.

    அல் குர்ஆன் 19:62. அங்கே ஸலாம்¹என்பதைத் தவிர எந்த வீணானதையும் அவர்கள் செவியுற மாட்டார்கள். அங்கே காலையிலும்மாலையிலும் அவர்களுக்குரிய உணவுகள் உள்ளன.
    அல் குர்ஆன் 25:24. அந்நாளில் சொர்க்கவாசிகள் அழகிய தங்குமிடத்திலும்சிறந்த ஓய்விடத்திலும் இருப்பார்கள்.

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
         சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள்பருகுவார்கள். மலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். சிறுநீர் கழிக்கவுமாட்டார்கள். அவர்கள் உண்ணும் உணவு கஸ்தூரி மணம் கமழும் வியர்வை போன்றுஏப்பமாக வெளியேறும். மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும்.
    இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
    இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
    அவற்றில் ஹஜ்ஜாஜ் பின் அஷ்ஷாஇர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் உண்ணும் அந்த உணவு" என்று இடம்பெற்றுள்ளது. (முஸ்லிம் 5454)

    அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
           ஒரு முறை நபி(ஸல்) அவர்கள்கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:
    சொர்க்கவாசிகளில் ஒருவர்தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், 'நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிரு,க்கவில்லையா?' என்று கேட்பான். அதற்கு அவர், 'ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால்நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்" என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராம் விடும்மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், 'எடுத்துக் கொள். ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது" என்று கூறுவான்.
    (நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, 'அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்கமுடியும். அவர்கள் தாம் விவசாயிகள்நாங்களோ விவசாயிகள் அல்லர்" என்று கூறினார். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள். (புகாரி 2348).

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.
    அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், "எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!" என்று கூறுவர். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்" என்று கூறுவர்.
    இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5448).

        ஆக இத்தகைய செயல்களும் இன்னும் அறியாதவற்றையும் சுவர்க்கவாசிகள் செய்யப்போகிறார்கள் என கூறப்படும் போது கட்டுரையாளரின் கருத்து எவ்வளவு மிகைப்படுத்தப்பட்ட விமர்சனம் என்பது தெளிவாக விளங்குகிறது. இவை அனைத்தும் சுவர்க்கத்தின் ஒவ்வொரு நாளிளும் அரங்கேறும் எனும் போது பாலியல் சுகமும் அதில் ஒரு பகுதி அவ்வளவே. மேலும் இந்த கட்டுரையில் இவரது விமர்சனங்கள் இவருக்கு ஆண்மை பலம் குறித்தும் மனித பாலியல் உடற்கூறியல் குறித்தும் எந்த அறிவும் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

    ஆண்மை பலத்திற்கு அல்லாஹ்வை அழைக்கக்கூடாதா?

          இந்த கேள்வியே எவ்வளவு முட்டாள்தன்மானது. இவ்வுலகிலும் மறு உலகிலும் அல்லாஹ் கொடுத்ததுதான் அனைத்தும் என்ற நம்பிக்கையுடையவர்கள் முஸ்லீம்கள். ஆண்மை பலத்திற்கு மட்டுமல்ல அனைத்திற்கும் அல்லாஹ்வையே இஸ்லாமியர்கள் சார்ந்திருக்கிறார்கள். எவ்வளவு முயன்ற போதிலும் குழந்தை பெறமுடியாதவர்கள் இந்த பூமியில் இருக்கிறார்கள் என்பதை கட்டுரையாளருக்கு நியாபகப்படுத்துகிறோம்.

         மேலும் இஸ்லாமிய ஆய்வாளர்களாக தங்களை காட்டி கொள்ளும் இந்த கட்டுரையாளர் போன்ற அறிவாளிகள்?????? தொடர்ச்சியாக ஒரு குற்றச்சாட்டை நபி(சல்) அவர்கள் மீது கூறிவருகின்றனர். அதாவது
    ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(சல்) அவர்களின் ஆண்மை விருத்திக்கு லேகியம் கொடுத்ததாக தொடர்ந்து உளறி வருகின்றனர். அவர்கள் இது குறித்த எந்த ஆதாரங்களையும் பதியவில்லை. ஆயினும் ஆங்கில வளைத்தளங்களும் இது குறித்து தொடர்ந்து பரப்பி வருவதால் இந்த செய்தியின் நிலை குறித்து முன் சென்ற இந்த ஆய்வில் காணலாம்.
    இப்படியாக நபி(சல்) அவர்களுக்கு லேகியம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் செய்திகள் யாவும் பலவீன்மான ஆதாரமற்றவை.

    சுவர்கத்தில் 72 கன்னியர்கள் எனும் கட்டுக்கதை

                   இந்த கட்டுரையாளர் பொதுவாக சுவர்கத்தில் 72 ஹூருல் ஈன்களை அல்லாஹ் தருவதாக போகிற போக்கில் கூறிச்சென்றாலும் இந்த குற்றச்சாட்டை பல இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் தொடர்ச்சியாக பரப்பித்திரிந்து தங்களது அரிப்பை தீர்த்து வருகின்றனர். ஆகவே இந்த தொடரில் இந்த செய்திகளை பரப்பும் மிசனரி/ நாத்திக வேட்தாரிகளின் தகவல் மூலமான விக்கி இஸ்லாம், ஆன்சரிங்க் இஸ்லாம் போன்ற மிசனரி தளங்களின் ஆங்கில கட்டுரைகளுக்கான பதிலை இந்த தொடரில் காணலாம்


    ஆண்களை போல் பெண்களுக்கும் துணை வழங்கப்படுமா??

                அதாவது கட்டுரையாளர் ஆண்களை போல் பெண்களுக்கும் துணைகள் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு இக்கால அறிஞர் சாகிர் நாயக் போன்றோரின் கூற்றை ஆதாரமாக கொண்டு,அதை எவ்வளவு கீழாக சித்தரிக்க முடியுமோ அந்த அளவிற்கு அதை சித்தரித்து தனது கடும் அரிப்பை தீர்த்துள்ளார்ஆனால் இவரது இத்தகைய வாதத்திற்கு எந்த ஒரு அறிவார்ந்த சான்றுகளையும் முன்வைக்கவில்லை என்பதுதான் அறிஞர் ஒருவரின் கருத்தை பிடித்து தொங்குவதற்கான காரணம்கட்டுரையாளர் எத்தனையோ ஹதீஸ்களையும் , விளக்கவுரையின் பகுதிகளையும் பதிந்து ஹூருல் ஈன்களின் மார்பு குறித்த வர்ணனைகளை எல்லாம் தேடி எடுத்த கட்டுரையாளருக்கு சுவர்கத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் ஆண் ஹூர் பற்றி எந்த செய்தியும் கிடைக்கவில்லை என்பதே ஹூர்களில் ஆண்கள் இல்லை என்பதற்கு போதிய சான்று. மேலும் அல்லாஹ் பின் வருமாரு தனது திருமறையில் குறிப்பிடுகிறான்


    ادْخُلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ (٧٠)

    43:70. நீங்களும் உங்கள் மனைவியர்களும் சொர்க்கத்தில் நுழையுங்கள்!''

         ஆக இந்த வசனமே போதுமானது பெண்களுக்கு சுவர்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் துணை இல்லை என்பதற்கு போதிய சான்று.

                மேலும் பெண்களுக்கு சுவர்கத்தில் ஆண்களுக்கு இணையாக வழங்கப்படும் என்பதற்கு சான்றாக பின்வரும் குர்ஆன் வசனம் கூறப்பட்டாலும் அந்த வசனம் என்ன கூறுகிறது என்பதை சற்று நாம் காண்போம் என்றால் கட்டுரையாளர் கூறுவது போல் ஒவ்வொரு சுவர்கத்து பெண்ணிற்கும் பல ஆண் துணைகள் இருப்பதாக எந்த கருத்தும் இல்லை.

         33:35. முஸ்லிமான ஆண்களும்பெண்களும்நம்பிக்கை கொண்ட ஆண்களும்பெண்களும்,கட்டுப்படும் ஆண்களும்பெண்களும்உண்மை பேசும் ஆண்களும்பெண்களும்பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும்பெண்களும்அடக்கமாக நடக்கும் ஆண்களும்பெண்களும்தர்மம் செய்யும் ஆண்களும்பெண்களும்நோன்பு நோற்கும் ஆண்களும்பெண்களும்தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும்பெண்களும்அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும்,பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும்மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

          ஆண்களுக்கு வழங்குவது போல் பெண்ணுக்கும் கூலி வழங்கப்படும் அவ்வளவுதான். ஆனால் இங்கு ஒரு கேள்வி பெண்ணியத்திற்காக???? கட்டுரையாளர் கேட்கிறார். அதாவது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநீதி இல்லையா என்று? 

          இங்கு கவனிக்கப்பட வேண்டியது இதுதான்.  ஆணின் உளவியல் மற்றும் உடற்கூறு தேவைக்கு ஏற்றார் போல் துணைகள் வழங்கப்படுகிறது. பெண்ணின் உடற்கூறிற்கு ஏற்றார் போல் அவர்களது உடற் சார்ந்த விஷயங்கள் மாற்றப்படுகிறது.. உதாரணமாக பெண்களின் கன்னித்தன்மை என்றுமே இருக்கும். மேற்குறிப்பிட்ட கட்டுரையாளர் புரிதல் படி இது ஆண்களுக்கு எப்படி சாத்தியமாகும்..ஆக ஆண்களின் உடற்தேவைக்கு ஏற்றார் போல் உடல் அமைப்பு மாற்றப்படுகிறது. இது பெண்ணின் உடல் தேவையையும் பூர்த்தி செய்துவிடும். இந்த அடிப்படை அறிவே இல்லாமல்தான் இந்த கட்டுரையாளர் இஸ்லாமிய மூல ஆதாரங்களை தேடினாராம். மேலும் இவ்வுலகில் இருக்கும் மனித தேவைகள்தான் சுவர்கத்தின் பரிசுகளாக கூறப்படும் போது பெண்களுக்கு இத்தகைய பல ஆண்களின் தேவை என்றும் உயிரியல் மற்றும் உளவியல் ரீதியாக இவ்வுலகில் இருந்ததில்லை எனும் போது அதை காட்டி பெண்களை நற்கருமங்கள் செய்ய தூண்டவியலாது, அதற்காக அவர்கள் தூண்டப்படவும் மாட்டார்கள்.  அதனால்தான் உளவியலாளர்கள் பின்வருமாறு கூறுவார்கள் “Women are Choosers” . அதாவது பெண்கள் என்றைக்கும் சிறந்த துணையை தேர்தெடுத்து கொள்வார்கள்.

    சுவர்க்கத்துக்கு சந்தைகள்:

        அல் ஹதீஸ் என்ற கிரந்தத்தில் இடம் பெறும் ஹதீஸை பதிவு செய்து சுவர்க்க சந்தையில் பெண்களும் ஆண்களும் விற்கப்படுவதாக கூறுகிறார் கட்டுரையாளர். இதை பதிந்த அல் ஹதீஸ் கிரந்தத்தின் ஆசிரியர் இந்த செய்தி இடம் பெறும் திர்மிதி என்ற புத்தகத்தின் பெயரையும் குறிபிட்டு இந்த செய்தி நூதனமானது என்ற கருத்தையும் அதில் பதிந்துள்ளார். ஆக நாம் மூல நூலில் இந்த ஹதீஸ் குறித்து பார்த்தோம் ஆனால், இமாம் திர்மிதி அவர்களும் இந்த ஹதீஸை நூதனமானது என்றே குறிபிட்டுள்ளார். மேலும் இந்த செய்தியில் இடம் பெறும் அப்துர் ரஹ்மான் இப்னு இஸ்ஹாக் மற்றும் அவர் செவியுற்ற நுஃமான் இப்னு சஃத் ஆகிய இரண்டு அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள். ஆக இந்த செய்தியும் ஏற்கத்தக்கது அல்ல. அதன் ஸ்னாப் இணைக்கப்பட்டுள்ளது.


     கட்டுரையாளரின் தீராத அரிப்பு:
         மேலும் கட்டுரையாளர் பெண்கள் தங்களது துணைக்காக காத்திருக்க வேண்டியதுதான் என்றெல்லாம் உளறிக்கொட்டியுள்ளார். இல்லை என்றால் சல்லாபக்காட்சிகளை கண்டு ரசிக்க வேண்டியதுதான் என உளறிக்கொட்டி அரிப்பை தீர்த்துள்ளார். முதலில் இரண்டு பெண் துணைகள் ஆணிற்கு, அதற்கான பலம் வழங்கப்பட்டாலே விஷயம் முடிந்துவிட்டது. பெண்ணின் தேவை ஆணின் பலத்தோடு தொடர்புடையது என்ற அடிப்படை பாலியல் அறிவே இல்லாத இந்த கட்டுரையாளரின் வர்ணிப்பே அர்த்தமற்றதாகி விட்டது. மேலும் நபி(சல்) அவர்கள் பின்வருமாறு குறிபிட்டார்கள்:

    புஹாரி : 4879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
    நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறைநம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். ஒரு மூலையிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர்.

        ஆக சல்லாபகாட்சியை காணலாம் என்பது எல்லாம் கட்டுரையாளரின் கீழ்த்தரமான எண்ண ஒட்டங்கள்தான். மேலும் 72 காளையர்கள் பெண்களுக்கு வழங்கப்படும் என்ற கேவலமான கற்பனை உண்மையில் கட்டுரையாளரின் மூளையில் உதித்த மூன்றாம் தர நீலப்பட குறுந்தகடு ஆக்கம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. மேலும் இவர்களைப் போன்ற தீரா அரிப்பு கொண்டவர்கள் இவ்வுலகில் தேடிச்செல்லும் காம பதுமைகளின் “Sex dolls” தோற்றுவிப்பாளர்கள் எல்லாம் இவர்களை போன்ற நாத்திகர்கள் மற்றும் யூத கிறித்தவ பிம்ப்கள்தான். மேலும் இவர்களை போன்ற நாத்திகர்கள் மற்றும் யூத கிறித்தவ பிம்ப்கள்தான்(Pimp)  கலிஃபோர்னியாவின் “ போர்ன் வேலியின்- Porn valley” ராஜாக்கள் என்பது நிகழ்கால நிதர்சனமாக இருப்பதால்தான் இவர்களின் எண்ண ஓட்டத்தை எல்லாம் இஸ்லாமின் மீது திணித்து இத்தகைய அவதூறுகளை பரப்ப துணிகின்றனர் எனபதில் எள்ளளவும் சந்தேகம் இருக்கமுடியாது.   

    தொடர் கட்டுரைகள்