Posts

Showing posts from 2019

"பிள்ளைகள், தங்களுடைய தாயின் முன்னாள் கணவர்களின் பண்புகளைப் பெறுகின்றன" -

Image
பெண்ணோடு  உறவு கொள்ளும் ஒவ்வொரு ஆணின் விந்தும், அவள் உடலில் சில அடையாளங்களை விட்டுச் செல்கின்றது என்பததாக உயிரியலாளர்கள் கூறி  வந்தனர். நவீன மரபணு பற்றிய ஆய்வுகள் (1979) இது அறிவியல் ரீதியான எந்தவித ஆதாரமும்  இல்லாத கட்டுக்கதை என்று மறுத்து வந்தது ஆனால் தற்போதைய ஆய்வுகள்(2010 & 2013) முந்தைய நம்பிக்கையை உறுதி செய்யும் வண்ணம் ஒவ்வொரு ஆணின் விந்தும்  மூலக்கூறு மற்றும் உடலியல் தடங்களை விட்டுச் செல்வதாக நிரூபணமாகிவுள்ளன மேலும் பிள்ளைகள், தங்களுடைய  தாயின் முன்னாள் கணவர்/துணைவர்களின் பண்புகளைப்  பெறுவதாகவும் நிரூபணமாகியுள்ளது. விவாகரத்து பெற்ற பெண்கள் 3 மாதவிடாய் தவணைகளும், விதவைகள் 4 மாதம் 10 நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் மேலும் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிறக்கும் வரை காத்திருக்கவேண்டும்  என்ற இறைக்கட்டளை  முந்தைய கணவனால்  பெண்ணின் கருவறையில்  ஏற்படும் மாற்றங்களை முற்றிலுமாக நீக்கியப்  பின்பு தான் வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம். வரும் காலங்களில் இது தொடர்பான அறிவியல் ஆய்வுகள்  இன்னும் அதிகப்படியான விளக்கங்களை  நிச்சயம் கொடுக்கும் . அல்லா

பசுமைப் புரட்சியைப் பறைசாற்றும் 10 நபிமொழிகள்!

Image
1.  மரம் நடுதலின் சிறப்பு: மரம் வளர்ப்பது பற்றி இஸ்லாம் கூறுவது என்ன? குறிப்பாக முஸ்லிம்கள் ஏன் இதில் அதிகம் ஈடுபடவேண்டும்? ------------------------------- "ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால் நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்" (நபிமொழி) 2.

நபி(சல்) அவர்கள் ஹசன்(ரலி) ஹுசைன்(ரலி) யை துஷ்பிரயோகம் செய்தார்களா??

Image
﷽‎         நபி(சல்) அவர்களின் வாழ்க்கையை விமர்சனம் செய்ய புகுந்த மிசனரிகளும், இஸ்லாமிய எதிர்பாளர்களும் அவர்களது குணத்திற்கு களங்கம் ஏற்படுத்த எடுத்த ஆயுதம் தான் அவர்களது இரத்த உறவுகளுடனேயே கீழான செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற விமர்சனம். முன்சென்ற தொடரில் இவர்களது கீழ்த்தரமான விமர்சனமான தனது பெரிய அன்னையின் பிணத்துடனேயே உறவு கொண்டார்கள் என்ற உளரலுக்கு பதிலளித்தோம். அதே போல இவர்கள் நபி(சல்) அவர்களின் சொந்த பேரன்களான ஹசன்(ரலி), ஹுசைன்(ரலி) அவர்களிடம் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், அதன் அடிப்படையில் உறவு முறைகளை துஷ்பிரயோகம் செய்தவர்,ஓரிணச்சேர்க்கையில் ஈடுபடுபவர், சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்தவர் என்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த படாதபாடு படுகின்றனர் மிசனரிகள். ஆனால் இவர்கள் என்றும் போல் தங்களது வாதத்திற்கு அறியப்பட்ட பொய்களை ஆதாரமாக கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நபி(சல்) அவர்கள் தனது பேரன்களின் மறைவுறுப்பை முத்தமிட்டதாக கூறும் பலவீனமான செய்திகளை முன்வைத்து விமர்சனத்தை முன்வைத்துள்ளனர் danielpipes.org போன்ற இணையத்தளங்கள் . ஆக இந்த ஹதீஸ்களை வரிசையாக பதிவிட்டு அதன் நில

இஸ்லாம் கூறும் பலதார மணத்தில் பெண்ணின் உரிமை

Image
ஏக இறைவன் அல்லாஹ்வின்  திருப்பெயரால்              இந்த பதிவானது பலதார மணம் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன என்பதை தெளிவாக இஸ்லாமிய சகோதர்ரகளுக்கும் இஸ்லாமிய எதிர்பாளர்களுக்கும் விளக்கவே. பொதுவாக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் பலதார மணம் குறித்து பேசும் போது பெண்ணின் உரிமை பாதிப்பதாகவே வாதிடுவார்கள். மேலும் இதனால் முதல்தாரத்தின் உரிமை பறிக்கப்படுவதாகும் வாதிடுவார்கள். உண்மையில் இஸ்லாமின் பலதார மணம் குறித்த பார்வையை தெளிவு படுத்தினாலே பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எப்படி இஸ்லாம் வரையறுக்கப்பட்ட உரிமைகளையும் கடமைகளையும் வழங்கியுள்ளது என்பது தெளிவாக விளங்கும் இன் ஷா அல்லாஹ். இஸ்லாம் கூறும் பலதாரமணம்: وَإِنْ خِفْتُمْ أَلا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلا تَعُولُوا (٣)    அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (

தும்மலின் போது இறைவனைப் புகழ்வது ஏன்?

Image
முஸ்லிம்கள்  உலகின் எந்தப்பகுதியிலிருந்தாலும், எந்த மொழி பேசினாலும் தும்மலின்  போது இதைத் தான் கடைபிடிக்கின்றனர். தும்மியவர்  "அல்ஹம்துலில்லாஹ்" (எல்லாப்புகழும் இறைவனுக்கே) என்று கூறுவார். அதைக் கேட்கும்  மற்றொருவர், "உங்களின் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும்" (யர்ஹமுகல்லாஹ்) என்று கூறுவார். இறுதியாக தும்மியவர், "இறைவன் உங்களுக்கு  நேர் வழி   காட்டட்டும்" (யஹ்தீக்குமுல்லாஹ்) என்று கூறுவார். தும்மியவர் எதற்கு இறைவனைப் புகழவேண்டும்? நவீன் அறிவியல் கூறும் காரணங்கள் இதோ: மனித தும்மிலிருந்து வரும் காற்று மணிக்கு 100 மைல் வேகத்தில் பயணிக்க முடியும் கடுமையான தும்மலால் விலா எலும்பு உடையக்கூடும் தும்மலின் போது மூக்கு மற்றும் வாயை மூடிக்கொண்டு தும்மினால் , நுரையீரலிலிருந்து காற்று வெளியாக முடியாமல் மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும் . மரணம் கூட ஏற்படலாம் . தும்மலின் போது , இருதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைகின்றது .. அந்த ஒரு நொடியில் இருதயம் நின்று போகலாம்          எல்லாப் புகழு

நபி(சல்) அவர்கள் பிணத்துடன் உறவு கொண்டார்களா????

Image
ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரால்                             மிசனரிகள் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து நபி(சல்) அவர்கள் மீது பரப்பப்படும் அவதூறுகளில் இதுவும் ஒன்று. அதாவது நபி(சல்) அவர்கள் அலி(ரலி) யின் தாயார் ஃபாத்திமா பின்த் அசத்(ரலி) அவர்கள் மரணித்த போது அவரது பிரேதத்துடன் உறவு கொண்டார்கள் என்பதுதான். ஃபாத்திமா பின்த் அசத்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களது பெரிய தந்தையான அபூதாலிப் அவர்களது மனைவியும், நபி(சல்) அவர்களது பெரியன்னையும் ஆவார்கள், மேலும் நபி(சல்) அவர்களது தாயாரான ஆமினா அவர்கள் மரணித்த,  பிறகு நபி(ஸல்) அவர்களை வளர்த்த அன்னை ஆவார்கள். இவர்களது பிரேத்துடந்தான் நபி(சல்) அவர்கள் உறவுகொண்டார்கள் என்ற அவதூறை பரப்பி திரிகின்றனர். அது குறித்து இஸ்லாமிய ஆதாரங்களான ஹதீஸ்களில் என்ன காணப்படுகிறது என்பதை காண்போம். இது குறித்து இரண்டு செய்திகள் காணப்படுகிறது:  செய்தி 1:  حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ، ثَنَا مُحَمَّدُ بْنُ غَالِبِ بْنِ حَرْبٍ َحَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْبُسْتِنْبَانِ بِسُرَّ مَنْ رَأَى، قَ