எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-12: கிறித்தவமும் பேய்வணக்கமும்
ஏக இறைவனின் திருப்பெயரால் சென்ற தொடர்களில் கிறித்தவர்களின் வேதமான பைபில் குறித்து ஆய்வு செய்தோம். அதில் இருந்த முரண்பாடுகள் மற்றும் வரலாற்று பிழைகளையும் கண்டோம். ஏன் அவர்களின் கொள்கையில் ஒன்றான ஏசுவின் சிலுவை மரணத்தை குறித்தும் அதன் குளறுபடிகளையும் அறிந்தோம். வரலாற்று குறிப்புகளில் ஏசுவின் சிலுவை மரணம் குறித்த செய்திகளில் கிறித்தவர்களின் திருகுதாளங்களையும் கண்டோம். வரும் தொடரில் அவர்களின் சில நம்பிக்கைகளையும் அதன் மூலம் எது என்பதையும் ஆய்வு செய்வோம். திரித்துவம் என்னும் பேய்வணக்கம்: இன்று இருக்கும் பெரும்பான்மை கிறித்தவர்கள் கூறும் கடவுட்கொள்கையானது திரித்துவம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது கர்த்தர், இயேசு, மற்றும் பரிசுத்த ஆவி மூன்றும் பிரிந்து கிடந்தாலும் மூன்றும் ஒன்றுதான் என்பதுதான். இந்த மூன்று தெய்வ கொள்கையின் மூலகங்களை ஆய்வு செய்வதினாலும் உன்மையில் ஏசு திரித்துவத்தைதான் போதித்தாரா என்பதை ஆய்வு செய்வதின் மூலம் இன்று இருக்கும் கிறித்தவத்தின் மூலம் அல்லது ஆதி தோற்றுவிப்பாளர்கள் யார் என்பதை அறிய முடியும். உன்மையில் பைபில் இந்த