Posts

Showing posts from 2017

உயிர்: 3.உயிர் என்றால் என்ன: இஸ்லாமிய பார்வை:

Image
ஏக இறைவனின் திருப்பெயரால் உயிர் என்றால் என்ன: இஸ்லாமிய பார்வை: சென்ற தொடரில் கூறியவாறு நபி(சல்) அவர்கள் இஸ்லாமை முன்வைப்பதற்கு முன்பும் பின்பும் பல தத்துவவியலாளர்கள் உயிர் குறித்து பல கருத்துகளை முன்வைத்துள்ளனர். இஸ்லாம் உயிர் குறித்து என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.  உயிர் குறித்து குர் ஆன் கூறுவது என்ன?     உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(அல் குர்ஆன் 39:42) மேற்கூறிய வசனம் அல்லாஹ் உயிர்களை இரண்டு தருவாயில் கைப்பற்றுவதாக கூறுகிறான். அதாவது தூங்கும் போதும், மரணத்தின் போதும் என்றும் கூறுகிறான். நாம் தூங்கும் போது நமது உயிர் கைப்பற்றப்படுகிறது ஆயினும் நம் உடலை சோதிக்கும் போது நமது உடல் உறுப்புக்களின் இயக்கமான மூச்சு, இதயதுடிப்பு போன்றவற்றை உணரவியலும். நமது உடலில் இருந்த உணர்வுநிலை இல்லாமல்

உயிர்: 2. வரலாற்றில் உயிர்:

Image
ஏக இறைவனின் திருப்பெயரால் வரலாற்றில் உயிர்: உயிர் என்றால் என்ன?????? இந்த  கேள்வியை மானுட சமுதாயம் பல நூற்றாண்டுகளாய் எழுப்பி வந்துள்ளது. இந்த கேள்வியை எழுப்பாத சமுதாயங்களே இல்லை என்றே கூறலாம். உயிர் குறித்து பல நூற்றாண்டுகாய் மனித சமுதாயம் ஆய்வுகளையும் பல சித்தாந்தங்களையும் முன் வைத்து வந்துள்ளது. அவை குறித்த ஒரு சிறிய பார்வை இதோ.........  தேல்ஸ்:(கிமு. 624-548)  அனைத்து உயிர்களுக்கும் மூலம் நீர். ஈரப்பதமே அனைத்து உயிர்களுக்கும் ஊட்டசத்தாக அமைகிறது. ஈரப்பத்தத்தில் இருந்து வெப்பம் உணடாகிறது. அந்த வெப்பமே உயிரின் ஆதாரம் என்ற கருத்தை தேல்ஸ் முன்வைத்தார் பித்தகோரஸ்:(கிமு 582-500) அழுகும் குப்பைகளில் இருந்து விலங்கினங்கள், கடவுளின் உயிரில் இருந்து தோன்றின. ஒரு விலங்கின் வாழ்வானது இந்த ஆன்மாவும், மண்ணுடலும் இணைந்திருக்கும் காலமே ஆகும். இந்த மண்ணுடல் இறக்கும் போது இந்த அழிவற்ற ஆன்மாவானது வேறொரு மண்ணுடல் ( அது விலங்காகவோ, மனிதனாகவோ இருக்கலாம்) அதனுள் நுழைகிறது. இதுவே மண்ணில் தோன்றும் அனைத்து நன்மை தீமைக்கும் காரணம். மேலும் உயிரானது மூன

உயிர் :1.உயிர் என்றால் என்ன?.......... மக்காவில் ஒருநாள்

Image
ஏக இறைவனின் திருப்பெயரால் உயிர் என்றால் என்ன?.......... மக்காவில் ஒருநாள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது,        “குரைஷியர்கள் அல் நள்ர் பின் அல் ஹாரிஸ் மற்றும் உக்பா பின் அபூ முயீத் ஆகியோரை “ முஹம்மது குறித்தும், அவர் கூறுவது குறித்தும் கேட்டுவாருங்கள். அவர்கள்தான் முதல் வேதத்திற்கு உரியவர்கள். நாம் அறியாதவற்றை அவர்கள் அறிவார்கள்” என கூறி அவர்கள் இருவரையும் மதீனாவில் இருந்த யூத ரப்பீக்களிடத்தில் அனுப்பிவைத்தனர். ஆகவே அல் நள்ர் மற்றும் உக்பா இருவரும் மதீனா சென்று யூத ரப்பீக்களிடத்தில் இறைத்தூதர் குறித்தும், அவர் கூறுவது குறித்தும் கூறினர். அவ்விருவரும் “நீங்கள் தாம் தவ்ராத்தையுடைய மக்கள், எங்கள் இந்த மனிதர் குறித்து அறிந்து கொள்ளவே உங்களிடம் வந்தோம்” என்றும் கூறினர்.           அதற்கு அந்த ரப்பீக்கள் அவர்களிடத்தில் “ நாங்கள் கூறும் இந்த மூன்று விஷயம் குறித்து அவரிடம் கேளுங்கள். இந்த மூன்றும் குறித்து அவர் பதிலளித்தால் அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தாம். அவ்வாறில்லாமல் அவர் பதிலளிக்கவில்லை என்றால் அவர் பொய்யர். அவரை நீங்கள் விரும்பியவாரு செய்து கொள்ளுங்கள்.

எதிர்தொடர் 24: சந்திரன் பிளந்துவிட்டது

Image
ஏக இறைவனின் திருப்பெயரால்           இஸ்லாம் இது இறைவனின் மார்க்கம்தான் என்பதை நிறுவ தன்னகத்தே எத்தனையோ ஆதாரங்களை கொண்டுள்ளது. அவற்றில் சில அறிவியல் உண்மைகளை உள்ளடக்கியவையாகவும் உள்ளன. நமது எதிர் தரப்பு கட்டுரையாளர் இந்த முறை, முஹம்மது(சல்) அவர்களுக்கு அன்றைய அரபிய குரைஷியர்களுக்கு தன்னை இறைவனின் தூதர் என்று நிறுவ ஏக இறைவன் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஓர் அற்புதமான, நிலவு பிளவுண்டது குறித்து சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார் (1) . இந்த விமர்சனங்கள் யாவும் இஸ்லாமிய எதிர்ப்பு வளைதளங்களில் இருந்து என்றும் போல் திருடப்பட்டவைதான். இந்த கட்டுரையாளர் இஸ்லாமிய எதிர்ப்பு விமர்சனங்களில் பகுத்தாய்வு என்பதை மேற்கொள்ளவே மாட்டாரா? என்ற எண்ணம் தான் இந்த கட்டுரையை எழுதும் போது நமக்கு ஏற்படுகிறது. சென்ற தொடர்களில் எல்லாம் கட்டுரையாளரின் பல அபத்தங்களையும், அவதூறுகளையும், அறியாமையையும் தோழுரித்திருக்கிறோம். இம்முறை கட்டுரையாளரின் அறிவியல் ஞானத்தையும், அந்த அறிவியல் ஞானம் எப்படி காழ்ப்புணர்ச்சியினால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பதையும் காண்போம். மேலும் தன்னை என்னதான முன்னாள் முஸ்லிம் என்று கூறினாலும், இஸ

தேனீக்கள் பற்றிய திருக்குரானின் அறிவிப்பு!

Image

உலக மக்களுக்கு, ஓர் அறிவுரை!

Image

"பெண் சிசுக்கொலை" - மதங்கள் என்ன சொல்கின்றன?

Image
"பெண் சிசுக்கொலை" - மதங்கள் என்ன சொல்கின்றன?  ஹிந்துயிசம் - ஹிந்து மத பிரமுகர்கள்  கண்டித்த போதிலும், மத/வேதங்கள் இது தொடர்பாக என்ன சொல்கின்றன என்ற விபரம் இல்லை. வேதங்களில் இது தொடர்பான விபரம் அறிந்தவர்கள்,  ஆதாரத்துடன் பதிவு செய்யுங்கள். இந்திய சட்டத்தில் தடை உள்ளது ஆனால் இந்த சட்டம் "ஹிந்து மத" சட்டம் அல்ல. கிறித்துவத்திலும், யூத  மதத்திலும்  கண்டிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்திற்கு முன் அரேபியர்களிடத்தில் இந்த பழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. அதை இஸ்லாம் அடியோடு ஒழித்து, அதைக் கொலைக்குற்றமாக அறிவித்தது. இது தொடர்பான திருக்குர்ஆன் வசனம்: " என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது" [81:8-9] "வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்." [17:31] மனித சட்டங்களால் மட்டும்  இவைகளை தடுத்து நிறுத்த முடியாது. இஸ்லாம் எப்படி இதை அடியோடு ஒழித்தது என்று பார்ப்போம். பெண் குழந்தைகளைக் கொல்பவர்