எதிர் தொடர் 16,17: வானவர்கள், மனிதர்கள், ஷைத்தான்கள்
ஏக இறைவனின் திருப்பெயரால் இந்த தொடரில் நாம் மனித படைப்பின் ஆரம்பம் குறித்தும் அது குறித்து இந்த கட்டுரையாளரின் ( 1,2 )புரிதல் குறித்தும் சிறிது நாம் அறிந்து கொள்வோம். மேலும் இந்த கட்டுரை அதிக விளக்கம் தேவை படும் கட்டுரையாக இருப்பதால் இதனை முழுவதுமாக குற்றச்சாட்டு பதில் என்று அமைக்காமல் விளக்கம் அளிப்பதாகவும் இதற்கடுத்து இடம் பெறும் கட்டுரையின் அடித்தளமாகவும் அமைக்கவுள்ளேன். ஆக அவர் கூறும் குற்றச்சாட்டுகளை தலைப்பாகயிட்டு சில விளக்கங்கக்ளும் இதில் இடம்பெற வுள்ளது இன்ஷா அல்லாஹ் மனிதனின் படைப்பு: ஏக இறைவன் அல்லாஹ் மனிதனின் படைப்பு குறித்து தனது திருமறையில் பின்வருமாறு ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறான். பொதுவாக அல்லாஹ் நபிமார்களின் வரலாறுகளை அல்குர்ஆனில் குறிப்பிடுவதற்கு காரணம் மனிதன் இதைகொண்டு படிப்பினை பெறுவதற்கு என்பதை அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான். அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்பட்ட செய்தி அல்ல. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்தி, ஒவ்வொரு பொருளையும் விளக