Posts

Showing posts from January, 2016

குறிப்பு 1 - எந்த ஒரு நற்செயலையும் குறைத்து மதிப்பிடவேண்டாம்

Image
இன்றிலிருந்து நாம் ஒரு புதிய புத்தகம் படிக்கலாம்......புத்தகத்தின் தலைப்பு..."70 Tips to win mutual Love and RESPECT (மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்)" திருக்குர்ஆன் & ஹதீத் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தின் ஒவ்வரு குறிப்புகளையும் சுருக்கமாக பார்ப்போம். நான் ஆங்கிலத்தில் உள்ளதை, நான் புரிந்த  வ கையில் மொழிபெயர்த்துத் தருகின்றேன்... சரியான மொழிபெயர்பிற்கு, மூல ஹதீத்களை பார்க்கவும். குறிப்பு 1:-   தன்னை மக்கள் விரும்பவேண்டும் என்று ஆசைப்படும் ஒருவன், மக்களை நெருங்கச் செய்யும், எந்த ஒரு செயலையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். ஒரு சிறிய ஆறுதல் அல்லது செயல் அல்லது தர்மம், நமக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அது கிடைக்கப் பெரும் நபரிடத்தில் அதன் மதிப்பு பல மடங்காக இருக்கும். நபி (ஸல்) சொன்னார்கள்: " எந்த ஒரு நற்செயலையும் குறைத்து மதிப்பிடவேண்டாம். அது உன் சகோதரனை முக மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக இருந்தாலும் சரியே. "|(சஹீஹ் முஸ்லிம் Book of Goodness to Parents and Keeping Ties. Hadeeth No. 1782) யாரவது ஒருவன், &q

பிற மதத்தவர்களுடன் நல்லுறவு............. (பதிவு : சகோதரர் அப்துல் சலாம் , வரைகலை : Meezan-தராசு )

Image
பிற மதத்தவர்களுடன் நல்லுறவு.............  ================================== முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களை முஸ்லிம்கள் உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் பல இடங்களில் கட்டளையிடுகிறது. இஸ்லாம் இன வெறியைத் தூண்டுவதாக இவ்வசனங்களைப் பார்க்கும் சிலர் எண்ணலாம். இவ்வாறு எண்ணுவது தவறாகும். திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையாளர்களும், யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருந்தார்கள். எப்படியாவது முஸ்லிம்களை அழித்து இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். போர் நடக்காத வருடமே இருக்கவில்லை. சில வருடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களையும் முஸ்லிம்கள் சந்தித்தனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சில முஸ்லிம்களின் உறவினர்களும், நண்பர்களும் எதிரிகளின் பகுதிகளில் இருந்தனர். அவர்களுடன் முஸ்லிம்கள் உறவாடி வந்தனர். முஸ்லிம்கள் மூலம் அவர்களுக்குத் தகவல்கள் கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. திருக்குர்ஆனிலேயே இது பற்றி விளக்கமும் உள்ளது. இஸ்லாத்தைக் கேலி

திருகுர்ஆனின் அல் பாத்திஹா சூராவிற்கு உருக்கமாக விளக்கமளித்து சபையோரை கண்ணீர் சிந்தவைத்த அமெரிக்க திரைப்படதுறை ஜாம்பவான் பிரான்ஸிஸ் போர்ட் கொப்போலா

திருகுர்ஆனின் அல் பாத்திஹா சூராவிற்கு உருக்கமாக விளக்கமளித்து சபையோரை கண்ணீர் சிந்தவைத்த அமெரிக்க திரைப்படதுறை ஜாம்பவான் பிரான்ஸிஸ் போர்ட் கொப்போலா ===================================================== அமெரிக்காவின் Detroit, மிக்ஸிகன் மாநிலத்தில் பிறந்த பிரான்ஸிஸ் போர்ட் கொப்போலா(Francic Ford Coppola) அமெரிக்க ஒஸ்கார் வரலாற்றில் இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை இம்மூன்றுக்காகவும் ஒஸ்கார் பரிசுபெற்ற ஆறு பேரில் ஒருவராவார். இவர் 15 பேரை கொண்ட திரைப்படதுறை நீதிபதிகளின் தலைவரும், The  God Father, Apocalypse போன்ற பிரமாண்டமான படங்ககளின் தயாரிப்பாளரும் ஆவார். மொரோக்கோவில் மரகஸ் என்னும் இடத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், கேள்வி நேரத்தின்பொழுது இஸ்லாம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு புனித திருகுர்ஆனின் முதல் சூராவாகிய அல்ஹம்து சூராவின் கருத்தை மிக அழகாகவும், உணர்வுபூர்வமாகவும், சபையோர் முன்நிலையில் எடுத்துக்கூறினார்.  இது பலருடைய மனதை வருடக்கூடியதாகவும், கண்ணீரை வரவழைப்பதாகவும் இருந்தது. அவர் மைக்ரோபோனை கையிலெடுத்து, சூரா அல் பாத்திஹா கூறும் சமாதானம், அன்ப

பன்றி இறைச்சி குறித்து நவீன மருத்துவ அறிவியலும், திருக்குர்ஆனும், பைபிளும் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்..!

பன்றி இறைச்சி குறித்து நவீன மருத்துவ அறிவியலும், திருக்குர்ஆனும், பைபிளும் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்..!  (Posted by Brother Tink Fair )  பன்றி இறைச்சி குறித்து விக்கிபீடியா ₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹ 2007 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகம் நடாத்திய ஆராய்ச்சியின் படி, பதனம் செய்த பன்றி இறைச்சியை உட்கொள்வதற்கும், நுரையீரலைத் தாக்கும் நோய்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. பாதுகாப்புப் பொருளான சோடியநைத்திரைற்று அதற்கு காரணமாகும். அதிக அளவில் பன்றி இறைச்சி போன்ற சிகப்பு மாமிசம் உண்பதால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சூழ்நிலை காணப்படுவதாக சொல்லப்படுகிறது. பன்றி இறைச்சி பொதுவாக உப்பு மற்றும் தெவிட்டிய கொழுப்பு அதிக அளவில் கொண்டதாகும். இவற்றை அதிக அளவில் உட்கொள்வதால் பல தரப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக விக்கிபீடியா தெரிவிக்கின்றது. மேலும் பன்றி இறைச்சி உண்பதால் ‘டேனியா சோலியம்’ -Taenia solium- (pork tapeworm) என்கின்ற புழு நமது உணவுக்குழாயின் அடிப்பகுதியில் நிரந்தரமாக தங்கி, அங்கே முட்டை இடுகின்றது.. இந்த முட்டைகள் இரத்த நாளங்களினூடாக பயணித்து இதயம், மூளை, கண், நு