அல் குர்ஆனில் எழுத்தர் பிழைகளா?
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ நாம் சென்ற தொடரில் நபித்தோழர்கள் எப்படி அல்குர்ஆனின் ஆயத்துக்களுடன் அதன் பொருளாக்கத்தையும் இணைத்து ஓதுவார்கள் என்பதை இஸ்லாமோஃபோபுகளின் விளங்காத விமர்சனத்தின் வாயிலாகவே விளக்கி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த தொடரில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது அறிவிப்பு ஒன்றை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் இந்த செய்தி எப்படி முன் சென்ற தொடரிற்கு மேலதிக விளக்கமாகவும் சான்றாகவும் உள்ளது என்பதை காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். முதலில் அவர்கள் முன்வைக்கும் ஆதாரத்தையும் அதில் இருந்து அவர்கள் வைக்கும் விமர்சனத்தையும் காண்போம். அந்நூர் அத்தியாத்தின் 27 ம் வசனத்தில் எழுத்தர் பிழை இப்னு அப்பாஸ்(ரலி) கூற்று - ஆதாரமும் வாதமும் நபித்தோழர்கள் குர்ஆன் வசனத்துடன் விளக்கத்தியும் ஓதும் வழக்கமுடையவர்கள்- ஆய்வாளர்களின் கருத்து தஸ்தஃனிஸூ என்பதின் பொருள் தஸ்தஃதனூ- இப்னு அப்பாஸ்(ரலி) விளக்கம் இப்னு அப்பாஸ்(ரலி)யின் ஒதலை கற்றுக்கொடுத்த முஜாஹித்(ரஹ்) அவர்கள் இன்றிருப்பது போல் ஓதுதல் இப்னு அப்பாஸ்(ரலி) --> முஜாஹித்(ரஹ்) மற்றும் ஸயீத் இப்னு ஜுபைர்-->அல் தூரியின் ஓதல் ஆ