Posts

Showing posts from July, 2017

உயிர்: 3.உயிர் என்றால் என்ன: இஸ்லாமிய பார்வை:

Image
ஏக இறைவனின் திருப்பெயரால் உயிர் என்றால் என்ன: இஸ்லாமிய பார்வை: சென்ற தொடரில் கூறியவாறு நபி(சல்) அவர்கள் இஸ்லாமை முன்வைப்பதற்கு முன்பும் பின்பும் பல தத்துவவியலாளர்கள் உயிர் குறித்து பல கருத்துகளை முன்வைத்துள்ளனர். இஸ்லாம் உயிர் குறித்து என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.  உயிர் குறித்து குர் ஆன் கூறுவது என்ன?     உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(அல் குர்ஆன் 39:42) மேற்கூறிய வசனம் அல்லாஹ் உயிர்களை இரண்டு தருவாயில் கைப்பற்றுவதாக கூறுகிறான். அதாவது தூங்கும் போதும், மரணத்தின் போதும் என்றும் கூறுகிறான். நாம் தூங்கும் போது நமது உயிர் கைப்பற்றப்படுகிறது ஆயினும் நம் உடலை சோதிக்கும் போது நமது உடல் உறுப்புக்களின் இயக்கமான மூச்சு, இதயதுடிப்பு போன்றவற்றை உணரவியலும். நமது உடலில் இருந்த உணர்வுநிலை இல்லாமல்

உயிர்: 2. வரலாற்றில் உயிர்:

Image
ஏக இறைவனின் திருப்பெயரால் வரலாற்றில் உயிர்: உயிர் என்றால் என்ன?????? இந்த  கேள்வியை மானுட சமுதாயம் பல நூற்றாண்டுகளாய் எழுப்பி வந்துள்ளது. இந்த கேள்வியை எழுப்பாத சமுதாயங்களே இல்லை என்றே கூறலாம். உயிர் குறித்து பல நூற்றாண்டுகாய் மனித சமுதாயம் ஆய்வுகளையும் பல சித்தாந்தங்களையும் முன் வைத்து வந்துள்ளது. அவை குறித்த ஒரு சிறிய பார்வை இதோ.........  தேல்ஸ்:(கிமு. 624-548)  அனைத்து உயிர்களுக்கும் மூலம் நீர். ஈரப்பதமே அனைத்து உயிர்களுக்கும் ஊட்டசத்தாக அமைகிறது. ஈரப்பத்தத்தில் இருந்து வெப்பம் உணடாகிறது. அந்த வெப்பமே உயிரின் ஆதாரம் என்ற கருத்தை தேல்ஸ் முன்வைத்தார் பித்தகோரஸ்:(கிமு 582-500) அழுகும் குப்பைகளில் இருந்து விலங்கினங்கள், கடவுளின் உயிரில் இருந்து தோன்றின. ஒரு விலங்கின் வாழ்வானது இந்த ஆன்மாவும், மண்ணுடலும் இணைந்திருக்கும் காலமே ஆகும். இந்த மண்ணுடல் இறக்கும் போது இந்த அழிவற்ற ஆன்மாவானது வேறொரு மண்ணுடல் ( அது விலங்காகவோ, மனிதனாகவோ இருக்கலாம்) அதனுள் நுழைகிறது. இதுவே மண்ணில் தோன்றும் அனைத்து நன்மை தீமைக்கும் காரணம். மேலும் உயிரானது மூன

உயிர் :1.உயிர் என்றால் என்ன?.......... மக்காவில் ஒருநாள்

Image
ஏக இறைவனின் திருப்பெயரால் உயிர் என்றால் என்ன?.......... மக்காவில் ஒருநாள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது,        “குரைஷியர்கள் அல் நள்ர் பின் அல் ஹாரிஸ் மற்றும் உக்பா பின் அபூ முயீத் ஆகியோரை “ முஹம்மது குறித்தும், அவர் கூறுவது குறித்தும் கேட்டுவாருங்கள். அவர்கள்தான் முதல் வேதத்திற்கு உரியவர்கள். நாம் அறியாதவற்றை அவர்கள் அறிவார்கள்” என கூறி அவர்கள் இருவரையும் மதீனாவில் இருந்த யூத ரப்பீக்களிடத்தில் அனுப்பிவைத்தனர். ஆகவே அல் நள்ர் மற்றும் உக்பா இருவரும் மதீனா சென்று யூத ரப்பீக்களிடத்தில் இறைத்தூதர் குறித்தும், அவர் கூறுவது குறித்தும் கூறினர். அவ்விருவரும் “நீங்கள் தாம் தவ்ராத்தையுடைய மக்கள், எங்கள் இந்த மனிதர் குறித்து அறிந்து கொள்ளவே உங்களிடம் வந்தோம்” என்றும் கூறினர்.           அதற்கு அந்த ரப்பீக்கள் அவர்களிடத்தில் “ நாங்கள் கூறும் இந்த மூன்று விஷயம் குறித்து அவரிடம் கேளுங்கள். இந்த மூன்றும் குறித்து அவர் பதிலளித்தால் அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தாம். அவ்வாறில்லாமல் அவர் பதிலளிக்கவில்லை என்றால் அவர் பொய்யர். அவரை நீங்கள் விரும்பியவாரு செய்து கொள்ளுங்கள்.