Posts

Showing posts from December, 2016

எதிர் தொடர் 23: பாதுகாக்கப்பட்ட திருக்குர்ஆன்

Image
ஏகஇறைவனின் திருப்பெயரால்       இந்த தொடரில் கட்டுரையாளர் குர்ஆன்பாதுகாக்கப்பட்டது குறித்து சில கேள்விகளை முன்வைத்துள்ளார். ஒவ்வோர் தொடரிலும் கட்டுரையாளரின் இஸ்லாம் குறித்த பார்வை மிசனரிகளின் வாந்திதான் என்பதை தோழுரித்து வருகிறோம். இவர் தன்னை நாத்திகராக காட்டி கொண்டாலும் இவரால் கூறப்படும் ஆதாரங்கள் யாவும் கிறித்தவ மிசனரிகளின் வளைத்தளங்களில் இருந்து பெறப்பட்டவைதான். அதே வரிசையில் இந்த கட்டுரையும் எதிர் கட்டுரையாளரால் முன்வைக்க பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இந்த தொடரில் குர் ஆன் குறித்த கட்டுரையாளரின் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பதிலளிப்போம். வசன மாற்றம் அல்லது சட்ட மாற்றம் ஏன்?   நமது பதில்:       வசனங்களை அல்லாஹ் மாற்றுவது என்பதற்கு நமது கட்டுரையாளர் முன் சொன்னது என்ன சொதப்பலா என்ற அறிவுப்பூர்வமான???? ஒரு கேள்வியை முன்வத்துள்ளார். அதற்கான விடையை அல்லாஹ் தெள்ளத்தெளிவாக தனது வேதத்தில் கூறிவிட்டான். وَإِذَا بَدَّلْنَا آيَةً مَكَانَ آيَةٍ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوا إِنَّمَا أَنْتَ مُفْتَرٍ بَلْ أَكْثَرُهُمْ لا يَعْلَمُونَ (١٠١) قُلْ