எதிர்தொடர்: 30,31 சுவனத்து சுகங்கள்
ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...... அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாம் எதிர்தொடரில் தன்னை முன்னாள் முஸ்லீம்?????? என கூறிகொள்ளும் ஒரு அரைவேக்காட்டு கட்டுரையாளரின் தொடர் கட்டுரைகளுக்கு பதில் அளித்து வருகிறோம். இம்முறை கட்டுரையாளர் எப்போதும் போல கிறித்தவ மிசனரிகளின் கட்டுரைகளை சுட்டு மொழியாக்கம் செய்து விட்டுள்ளார். இந்த முறை கட்டுரையாளர் எடுத்துக்கொண்ட பொருள் இஸ்லாம் கூறும் மறுமை வாழ்க்கை (1) என்பதாகும். கட்டுரையாளாரின் ஒவ்வொரு கருத்தியல்களின் மூடத்தனைத்தையும் இந்த கட்டுரையில் தோழுரிப்போம் இன்ஷா அல்லாஹ் தொடங்கும் போதே உளரல் ??????? என்றும் இந்த கட்டுரையாளர் இவர் உருவாக்கும் கட்டுரையின் மையப்பொருள் தனதாக காட்டிக்கொள்ள தனது மனதில் தோன்றும் சப்பை வாதங்களை கட்டுரையின் ஆரம்பப் பகுதியிலேயே முன்வைப்பார். அது போன்ற ஒரு உளரல்தான் பின்வருவது. //வீட்டுவாடகை, School fees, collage fees, Ration கடை, பருப்பு, பாமாயில், கரண்ட பில் என்ற எந்த கவலையும் சொர்கத்தில் உங்களுக்கு இருக்காது. பஸ்ஸை பிடிக்க வேண்டும், இரயிலைப் பிடிக்க வேண்டும், கல்யாணத்திற்குப் போக வேண்டும்