Posts

Showing posts from 2020

ஏழு அஹ்ரூஃபும் ஏழு கிராத்தும்

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ       குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் வைக்கும் அறைவேக்காட்டு வாதங்களுக்கு , ஆதாரப்பூர்வமான வரலாற்று தரவுகளை முன்வைத்து விரிவான பதில்களை கண்டுவருகிறோம். அல்ஹம்துலில்லாஹ். இந்த வரிசையில் குர்ஆன் வரலாறு குறித்த விமர்சனங்களில் ஏழு அஹ்ரூஃப் குறித்த இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கான விளக்கம் எளிமையாக புரிந்து கொள்ளும் படியாக இருந்தாலும், முன் சென்ற அறிஞர்களின் ஆய்வை முன்னிறுத்தி சில வாதங்களை கிறித்துவ மிசனரிகளும், Ex- முஸ்லிம் என்று கூறித்திரிவோரும் முன்வைத்து வருகின்றனர். அதற்கான பதிலை இந்த பாகத்தில் காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் வாதங்களை முதலில் பார்ப்போம். இஸ்லாமோஃபோபுகளின் குருட்டு வாதமும் அதன் நோக்கமும் ஏழு அஹ்ரூஃப் குறித்த கருத்துக்கள் ஏழு அஹ்ரூஃபில் இறங்கிய அல்குர்ஆன் அஹ்ரூஃப் என்பதின் பொருள் அஹ்ரூஃப் என்றால் வட்டார வழக்கா??? ஏழு அஹ்ரூஃப் என்பது இலக்கண மாறுபாடுகள் மட்டுமா???? அஹ்ரூஃபின் - மாறுபட்ட முறை என்ற பொருளே அதன் விளக்கம் அஹ்ரூஃபும் கிராத்தும் குர்ஆனில் 10243 மாற

உஸ்மான்(ரலி) அரசாணையும் இப்னு மஸ்ஊத்(ரலி) எதிர்ப்பும் ஏற்பும்

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ         உஸ்மான்(ரலி) அவர்கள், அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவினால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனை இஸ்லாமிய பேரரசின் பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார்கள். அதனோடு ஒரு கட்டளையும் பிறப்பித்தார்கள். அதாவது ஏனைய குர்ஆன் பிரதிகளை அழிக்க கட்டளை பிறப்பித்தார்கள். குர்ஆனை ஸைத் இப்னு ஸாபித்(ரலி) தொகுத்ததற்கும், ஏனைய குர்ஆன் பிரதிகளை பரிமுதல் செய்து எரிக்கவும் பிறபிக்கப்பட்ட கட்டளையை எதிர்த்தவர் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆவார்கள். இதற்கு இஸ்லாமோஃபோபுகள் வைக்கும் வாதங்களும் அதற்கான பதிலும்  இதோ.  இஸ்லாமோ போஃபுகளின் ஆதாரமும் குருட்டு வாதமும் உஸ்மான்(ரலி) அமைத்த குர்ஆன் தொகுப்பு குழுவும் அதன் முடிவும் குர்ஆன் பிரதிகளை எரிப்பது யாரது முடிவு?? இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் எதிர்ப்பும் ஏற்பும்  வரலாற்று நூல்களின் பதிவுகள் இப்னு அபி தாவூத் அவர்களின் கருத்து இப்னு அதிர் அவர்களது வரலாற்று குறிப்பு இப்னு அஸாகிரின் கருத்து இப்னு கஸீரின் கருத்து அபுபக்கர் அல் அன்பாரியின் கருத்து ஆதாரம்: وَلِذَلِكَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ يَا أَهْلَ الْعِرَاقِ اكْتُمُوا الْمَصَاحِفَ الَّتِي عِن

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுக்க தகுதியற்றவரா?

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ           குர்ஆனின் பாதுகாப்பு குறித்து விளக்கங்கள் கொடுக்கப்படும் போது அதற்கு இஸ்லாமிய எதிர்ப்பாளர்களிடம் புறப்படும் விமர்சனங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது இந்த தலைப்பு ஆகும். இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் ஓதல் குறித்த சிறப்புகளை முன்னிறுத்தி, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களது தொகுப்பில் குறை இருப்பதாகவும் , நபி(சல்) அவர்களால் புகழப்பட்ட இப்னு மஸ்ஊத்(ரலி) போன்ற நபித்தோழரே இதனை எதிர்த்துள்ளார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இஸ்லாமோஃபோபுகள் பெரும் முயற்சியை மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்வின் உண்மை நிலை என்ன என்பதை இங்கு காண்போம் இன் ஷா அல்லாஹ். இஸ்லாமோ போஃபுகளின் ஆதாரங்களும் குருட்டு வாதமும் இப்னு மஸ்ஊத்(ரலி) மட்டும்தான் குர்ஆன் ஓதலில் தலைசிறந்தவரா? நபி(ஸல்) அவர்களிடம் முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்த ஸைத்(ரலி) அபூபகர் அல் அன்பாரி அவர்களின் கருத்து இஸ்லாமோ போஃபுகளின் குருட்டு வாதம்       குர்ஆனை ஓதவும் அதனை கற்றுக்கொடுக்கவும் நபி(சல்) அவர்களால் பெரிதும் முன்னிறுத்தப்பட்டவர் இப்னு மஸ்ஊத்(ரலி) என்று மிசனரிகள் முதற்கொண்டு பல இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால

குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத் பின் ஸாபித்(ரலி)

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ        நபி(சல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு குர்ஆனை தொகுக்கும் குழுக்கள் இரண்டு முறை இஸ்லாமிய கலிஃபாக்களால் நியமிக்கப்பட்டுள்ளது. முதல் முறை அபூபக்ர்(ரலி) அவர்களால், இரண்டாவது முறை உஸ்மான்(ரலி) அவர்களால். இரண்டிலுமே ஸைத் பின் ஸாபித்(ரலி) பங்குபெற்றுள்ளார்கள். குர் ஆன் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களிற்கான விளக்கங்களை புரிந்து கொள்ள முதலில் மேற்குறிப்பிட்ட ஸைத பின் ஸாபித்(ரலி) அவர்களின் நியமனத்தின் நியாயங்கள அறிந்து கொள்வது அவசியமாகும். அது குறித்த ஹதீஸ்களை முதலில் பார்ப்போம். அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தில் குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களது காலத்தில் குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத்(ரலி) நபி(சல்) அவர்களது காலத்திலேயே குர்ஆன் முழுவதையும் முழுமையாக மனனமிட்ட ஸைத் பின் ஸாபித்(ரலி) இறுதி ஓதல் "  அர்தா அல் ஆஹீரா " வின் சாட்சி ஸைத் இப்னு ஸாபித்(ரலி அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தில்           ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்.          யமாமா பே