அரசியல்வாதிகளின் பேச்சில் உண்மை இருக்காது - எல்லோரும் ஏற்றுக்கொண்ட உண்மை. ஊடகங்கள் பணத்திற்காக எதையும் சொல்வார்கள் - இதுவும் அனைவருக்கும் தெரியும். கேப்டன் "துப்பியது" உலகப் புகழ் பெற்றது. நம் சகோதரரை ஒருவன் தவறாகச் சொன்னால், அதை அவரிடம் தீர விசாரித்து உண்மையை அறியவே ஒரு நேர்மையான உள்ளம் விரும்பும். ஜாகிர் நாயக்கை அரசியல் வாதிகளில் சிலரும், பணத்திற்காக எதையும் சொல்லும் ஊடகங்களில் சிலரும் தவறாக சித்தரிக்கின்றனர். நீங்களே நேரிடையாக கேட்டு, உண்மையை தெரிந்து கொள்ளுங்களேன். டாக்டர் ஜாகிர் நாயக், ஹிந்து, கிறிஸ்துவ, புத்த மற்றும் சீக்கிய மத வேதங்களில் உள்ளதை ஒளிவு மறைவில்லாமல் மக்களிடம் வைப்பதினால் மாற்று மத சகோதரர்களும் தங்கள் வேதங்களை அறிந்துகொள்வதில் ஆர்வமூட்டப்படுகின்றனர். நீங்கள் ஒரு குரு அல்லது சாமியாரைப் பின்பற்றினால் அவர்களின் வேதங்கள் பற்றிய நிலைப்பாடுகளில் ஒரு அஜெண்டா இருக்கும். அவர்கள் ஆதரிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் தான் சொல்வார்கள். டாக்டர் ஜாகிர் நாயக்கின் அணுகுமுறையில் நீங்கள் அறிந்திராத, இத