அபூதர்தா(ரலி) அல் லைல் சூராவை (அல் குர்ஆன் 92:3) மாற்றி ஓதினார்களா???
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ குர்ஆனின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்படும் குற்றச்சாட்டில் அடுத்து இடம் பெறுவது அபூதர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கும் அல் குர்ஆன் 92 வது அத்தியாயம் குறித்த ஹதீஸ் ஆகும். இந்த செய்தி பல கிரந்ததங்களில் அபூதர்தா(ரலி) அவர்களிடம் இருந்து அல்கமா(ரஹ்) அவர்கள் வழியாக ஒற்றை அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி புகாரியில் 4944 ஆவது செய்தியாக இடம் பெறுகிறது. இன் ஷா அல்லாஹ் அதன் விளக்கத்தை காண்போம். இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரமும் வாதமும் ஒற்றை அறிவிப்பாளர் தொடர் ஹதீஸ்கள் தவத்தூர் அறிவிப்பை மறுக்குமா குர்துபீ அவர்களது தஃப்ஸீரில் அபூபக்கர் அல்அன்பாரி அவர்களது கருத்து ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களது விளக்கம் அபூதர்தா(ரலி) அவர்களது ஈராக்வாசிகளின் ஓதலில் அல் லைல் சூரா இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அறிவித்தார் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்து அபுத்தர்தா(ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா(ரலி) தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள். பிறகு,