எதிர்தொடர் 24: சந்திரன் பிளந்துவிட்டது
ஏக இறைவனின் திருப்பெயரால் இஸ்லாம் இது இறைவனின் மார்க்கம்தான் என்பதை நிறுவ தன்னகத்தே எத்தனையோ ஆதாரங்களை கொண்டுள்ளது. அவற்றில் சில அறிவியல் உண்மைகளை உள்ளடக்கியவையாகவும் உள்ளன. நமது எதிர் தரப்பு கட்டுரையாளர் இந்த முறை, முஹம்மது(சல்) அவர்களுக்கு அன்றைய அரபிய குரைஷியர்களுக்கு தன்னை இறைவனின் தூதர் என்று நிறுவ ஏக இறைவன் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஓர் அற்புதமான, நிலவு பிளவுண்டது குறித்து சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார் (1) . இந்த விமர்சனங்கள் யாவும் இஸ்லாமிய எதிர்ப்பு வளைதளங்களில் இருந்து என்றும் போல் திருடப்பட்டவைதான். இந்த கட்டுரையாளர் இஸ்லாமிய எதிர்ப்பு விமர்சனங்களில் பகுத்தாய்வு என்பதை மேற்கொள்ளவே மாட்டாரா? என்ற எண்ணம் தான் இந்த கட்டுரையை எழுதும் போது நமக்கு ஏற்படுகிறது. சென்ற தொடர்களில் எல்லாம் கட்டுரையாளரின் பல அபத்தங்களையும், அவதூறுகளையும், அறியாமையையும் தோழுரித்திருக்கிறோம். இம்முறை கட்டுரையாளரின் அறிவியல் ஞானத்தையும், அந்த அறிவியல் ஞானம் எப்படி காழ்ப்புணர்ச்சியினால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பதையும் காண்போம். மேலும் தன்னை என்னதான முன்னாள் முஸ்லிம் என்று கூறினாலும், இஸ