"நீதி" யின் பெயரால் அநீதி!!
By Nadodi Tamilan கடந்த வருடம் மட்டும், சீனாவில் மரண தண்டனைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2400 . இது உலகிலுள்ள மற்ற நாடுகளை விட மூன்று மடங்கு அதிகம் . (உலக மனித உரிமை அமைப்பு)(1) அமெரிக்காவில், இந்த நூற்றாண்டின் ஒவ்வரு வருடத்திலும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், இறுதியில் நிரபராதி என்று அறியப்பட்டுள்ளனர். (2) மற்றொரு ஆய்வின் படி, அமெரிக்காவில் 1973 முதல் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் 343 பேர், நிரபராதியாக விடுவிக்கப்பட்டு இருக்க வேண்டும். (3) குற்றம் சாட்டப்பட்டவர்களை அடித்து துன்புறுத்துவது, பொய் குற்றச்சாட்டில் மக்களை கைது செய்வது, மத/இன வெறியின் அடிப்படையில் மக்களை அணுகுவது இந்தியாவில் அதிகம் நடப்பதால், ஒரு நிரபராதி தூக்கிலடப்படுவதற்கான சாத்தியக்கூறு மிகவும் அதிகம். உதாரணமாக இன்று தூக்கிலிடப்பட்ட, யாகூப் மேனன் விடயத்தை எடுத்துக்கொள்வோம்: "சரியான ஆதாரம் இல்லாமல், யாகூப் மேனனை கொன்றுவிட்டார்கள்" "யாகூப் மேனனை தூக்கிலிட்டது தவறு" "வாய்மொழி உத்திரவாதம் மூலம் அவரை சரணடைய செய்து, அவர் உதவியால் ப