அர்த்தமுள்ள கேள்விகள் - 11 - மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்?
நாத்திகர்கள் & பகுத்தறிவாதிகள் பொதுவாக எழுப்பும் கேள்விகளில் இதுவும் ஒன்று முஸ்லிம்கள் ஆதாம், ஏவாலில் இருந்து வந்ததாக சொல்கின்றனரே அப்போது ஏன் மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் காணப்படுகின்றனர் என்று?? நியாயமான கேள்விதான் இதற்கு நமது பதில், கேள்வி: ஒரு இந்து சகோதரரிடம் உரையாடும் போது 'மனித சமுதாயம் ஆதம்' ஹவ்வா' எனும் இருவர் வழியாகவே உருவாகியுள்ளது'என்று கூறினேன். அதற்கு அவர் அப்படியெனில் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், ஆதிவாசிகள் வெவ்வேறு தோற்றத்துடன் இருக்கிறார்களே? என்றார். இதற்கு எப்படி விளக்கம் கொடுக்க வேண்டும்? பதில்: இந்த வாதத்தில் உள்ள அடிப்படைத் தவறை விளக்கினாலே போதும். ஒரு தாய்க்கும், ஒரு தந்தைக்கும் பிறந்தவர்கள் ஒரே தோற்றத்தில், ஒரே நிறத்தில் இருப்பார்கள் என்ற அடிப்படையே தவறாகும். இதற்குப் பெரிய ஆராய்ச்சிஎதுவும் தேவையில்லை. உங்கள் குடும்பத்தில், உங்கள் தெருவில், உங்கள் ஊரில் உள்ளவர்களை ஆராய்ந்தாலே போதுமானதாகும். ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்த அண்ணன் தம்பிகளை முரண்பட்ட நிறத்திலும், தோற்றத்திலும் சர்வசாதாரணமாக நாம்பார்க்கிறோம். அவர்க